Skip to main content

மெளனத்தின் மெளனம்!



எந்த உந்துதலும் இல்லாத....
ஒரு வெற்று நாளில்....
மனதில் வார்த்தைகளே இல்லாத....
ஒரு இரவு நேரத்தில்...
மெல்லிய மெளனம் ...
என்னைத்தாலாட்டிய தருணத்தில்
இறைவனை நான் கண்டேன்!

மெளனத்தில் வலிமையினை...
நிசப்தத்தில் என்னுள் அவர்
ஊற்ற ஊற்ற.... நிரம்பாமல்...
வெறுமையானேன்!

கனமான வார்தைகளும்..
கவர்ச்சியான பேச்சுக்களும்....
வண்ணமிகு வாழ்க்கைகளும்...
போலியாய் எனைப்பார்த்து
சிரித்தபோது...

சப்தமில்லா அந்த அனுபவம்
என்னுள் என்னை மீண்டும் அமிழ்த்தியது...
மீண்டும் திரும்ப விரும்பாமல்...
அப்படியே நானிருக்க...எண்ணுகையில்..
மெலிதாய் எனை புறம் தள்ளி....
சராசரி வாழ்க்கையில்....
சற்று காலம் இருக்கச்சொன்னார்!

பொய்யான வாழ்க்கைதான்...
பொறுமையாய் வாழ்ந்து பார் என்றார்...
மன அழுக்கான மனிதர்கள்தான்.
நீ மனமின்றி வாழ்ந்து பார் என்றார்...
பணத்தைதான் போற்றுவார்...
நீ பிணம் போல கிடந்து வா என்றார்...!

இரைச்சலுக்கு மத்தியில்
இரைச்சலில்லாமல் வாழ்ந்து என்னை....
கற்பூரம் கரைவது போல
மெல்லவே கரையச்சொன்னார்....!

தாகத்தில் நீராயும்...
மோகத்தில் உச்சமாயும்..
வெயிலில் நிழலாயும்....
இரக்கத்தில் கனிவாயும்..
என்னுடனே இருப்பேன் என்றார்..!

இறைவனின் விருப்பமுடன் தான்...
என் இந்த நிமிடமும் கழிகிறது!
ஊமைகண்ட கனவு போல....
உள்ளுக்குள் விழித்து வெளியே நான் உறங்குகிறேன்!


எல்லோரும் எப்போதும் பேசிப் பேசி... எதையோ எண்ணி எண்ணி மனதில் இடைவிடாமல் வார்த்தைகளை இறைத்து இறைத்து ஒரு வாகன நெரிசலை உண்டு பண்ணிவிட்டு...கடவுளை வெளியில் தேடித் தேடி... கடவுள் இல்லை என்றும் மேலும் சில பொருட்களை சில மனிதர்களை கடவுள் என்று தவறாக எண்ணி... அந்த நபரிடமும் அந்த பொருளிடமும் ஏமாந்து விரக்தியின் உச்சத்தில் நடை பிணமாய் வாழ்ந்து இறை என்றாலே என்ன. .. என்று உணரமுடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்....!



உங்களின் செயல்களை வெளியே நிகழ்த்துங்கள்.... உங்களின் உள்ளே எல்லாவற்றையும் சாந்தப்படுத்துங்கள்...வார்த்தைகளையும் எண்ணங்களையும்... உற்று நோக்கி நோக்கி... மெல்ல அவற்றை கரையுங்கள்.... நிசப்தம்..... மெளனம்..... மீதமிருப்பது உங்கள் உடல் கூட இல்லை....எதுவுமே இல்லை... ஆழ்ந்த மெளனம்.....

இன்னும் என்ன வார்த்தைகளில் சொல்ல.... உணர்ந்து பாருங்கள்.. குளிரை, வெயிலை... காற்றை..கூடல் சுகத்தை வார்த்தைகளால் வர்ணித்தால் அது பொய்... விளக்கத்தை...வார்த்தைகளில் தேடாமல்.....உங்களுக்குள் தேடுங்கள்...கடவுள் யாரென்று தெரியும்....!


-Dev Subbiah

Comments

வெகு நேர்த்தி.... இதுபோல் காலத்தால் அழிக்க இயலாத (உனது இந்த ஜென்மாந்திரப்பயணம்) காவியங்கள் பலநீபடைக்க எனது வாழ்த்துக்கள் நண்பா....
இந்தப்படம் இந்தப்பக்கத்திற்கு ஏக பொருத்தம்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல