Skip to main content

சிவப்பு சிந்தனை....













வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....!
செல்லரித்த...கட்டைகளாய்...
தெருவின் ஓரங்களில்...!
2020லாவது... ஏக்கங்கள் தீராதா....
தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா?
கடல் நீரை குடி நீராய்...
மாற்றும் திட்டத்தோடு...
இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...!

எத்தனை தலைமுறைதான்...
தெருமுனையில் ஜனித்து...
நடை பாதையில்... வளர்ந்து...
ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்...
வாழ்வாதாரமாக நம்பி வழுமோ?

தெருவோர அகதிகள்....
இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா?
முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்...
ஜன நாயக...அடிமைகள்...
காக்க ஒரு கட்சி உண்டா!

சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்...
தன் பரம்பரை சொத்தாய்...
வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்....
காம உச்சத்தின்... அடையாளமாய்...


இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?

- சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று!

கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்; எந்தவித... சம்பந்தமும் இன்றி.. இவர்களை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய இறைவன் மீது கோபம் வரும்! கார்களிலும் பேருந்திலும், பைக்குகளிலும் லட்ச லட்சமாய் செல்லும் மக்களுக்கு வாடிக்கையான காட்சிகள்தான் இவை என்றாலும்...இந்த நிலையை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ... அரசின் மீது கோபம் வரும்!

சாமானிய என் கோபம் என்ன செய்து விடும்... ஒரு கவிதையாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவில்..தெரித்த வார்த்தைப் பொறிகள்தான் இந்த கவிதை. எங்காவது ஒரு இடத்தில் எனது சிறு பொறி பட்டு பெரும் தீப்பிழம்பாய் மாறி...வரும் காலங்களில்.. சிறார்கள் எந்த இடத்திலும் பிச்சை எடுக்காமல் இருந்தால் சரிதான்.



தேவா. S

Comments

ரவுத்திரம் தெறிக்கின்றது ...கவிதையில்...!
இந்த ரவுத்திரம் அப்படியே இருக்கட்டும்
எல்லா இடங்களுக்கும் பரவட்டும்...!
ஒருநாள் கண்டிப்பாக கொதித்து வெளிப்படும் ...!
அப்போது இந்த அவலங்கள் அழிந்து விடும்..!

......................................நம்பிக்கையுடன்...!
Chitra said…
இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?


........இந்த கோபத்தீ போதுமே!

////கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்;////

பல சமயங்களில், அந்த குழந்தைகள், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதில்லை என்பது கவலைக்குரிய/பிரச்சினைக்குரிய விஷயம்.

பதிவுடன் தந்திருக்கும் பாடலும் பொருத்தம்.
மங்கை said…
word verification eduthurungalean
I am also try to remove this. If anybody ready to give me the join hands.
தேவையான ரௌத்திரம். கொதி நிலை எழுத்தின் நிறமாகவும், திடமாகவும்...

காட்சிகள் மாறட்டும் விரைவில்...
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த