Skip to main content

கிளிகளின் கீதம்....











சாலையோர என்வீடு...
வீட்டோர...புங்கை மரம்...
மரமிருக்கும் கிளிக்கூட்டம்...
ஒவ்வொரு அதிகாலை...
விடியலும்...இசைக்கச்சேரிதான் எனக்கு!

பிரம்ம முகுர்த்தத்தில் எழுந்து கொள்ளும்...
என்பகுதி விழிப்பு நிலையில்....
அவற்றின் குடும்ப பேச்சுக்கள்...
விழுந்தும் விழாமல்....
என் காதோராம்....உரசிச் சொல்லும்.!

சில நாள்...அவை பேசி சிரிக்கும்...
சில நாள் சண்டையிடும்...
பல நாள் காதல்கொண்டு...
மெதுவாய்....
கிசு கிசுத்து....
மனித அரவத்திற்கு முன்னே....
இரை தேடி....புறம் பறந்து செல்லும்....!

என் விடுமுறை நாளின்
எல்லா பகல் நேரமும்....
புங்கை மரக் கிளிக் கூட்டத்தோடுதான்...
கரைந்து செல்கையில்...
கூட இரண்டு குயில் சேர்ந்து....
இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்...
இப்பூமியின் இடர்ப்ப்பாடுகள் பற்றிய...
கவலையின்றி அவை தினம் பறக்கும்!

அதுவும் ஒரு விடியல்தான்...
அதிகாலை நேரம்...தான்...ஆனாலும்....சப்தமில்லை.....!
ஏன் கடந்த இரவு இன்னும் ...
விடியவே இல்லையா...?
அனிச்சையாய் எழுந்த கேள்வியில்...
அர்த்தம் இருப்பதாய் தோணவில்லை...!

பாதி தூக்கத்தில்...
கலைந்தது என் கனவு.....
கிளி சப்தமில்லா காலையில்....
தகர்ந்தது...என் இரவு.....!
என்னாவாயிற்று...என் இசைக் கச்சேரிக்கு...
மனிதன் எழும் முன்னே எழும் ...
கிளிக் கூட்டம்..மறந்து போய் உறங்குகிறதோ?
காசு வாங்காமல்...கூவும் குயிலின்..
புத்தியை மாற்றிவிட்டது யார்?

காத்திருந்து....புரண்டு...புரண்டு....
சப்தம் இல்லா சூன்யத்தில்...
என் உறக்கம் ஓடி ஒளிந்தது.....
கதவு தாள் திறந்து...கண் மடல் விரித்து...
வாசலோராம் நான் பார்த்து திகைத்து...
வீட்டினுள்ளே திரும்பிப்பார்த்தேன்.....
என் வீடுதானே இது..?!

நேற்று வரை இங்கிருந்த
புங்கை மரம் ....எங்கே?
புங்கை மர கிளைகளுக்குள்....
குடியிருந்த கிளிகள் எங்கே?
சொல்லாமல் கொள்ளாமல் செல்ல...
மனிதரல்ல...மரமன்றோ....அது?!
உற்று நோக்கிய பின்....
சாலையோர சரிவில்....புங்கை மரம்...
பிணமாய் கிடந்தது.....!
கிளிகள் குடியிருந்த கிளைகள்...
குண்டடி பட்ட குழந்தைகளாய்....!!!

தொலைபேசி பணியின்....அகழ்வாராச்சிக்காக....
வேரோடு.... பெயர்க்கப்பட்டு....
அத்துனை இலைகளும் திறந்த விழிகளாய்...;
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!

வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனதது...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
முடிந்திருக்குமே....!
வெட்டவெளி வானத்தை
வெறித்து பார்தேன்...எட்டும் வரை தேடினேன் ...
கிளிக்கூட்டம் காணவில்லை...!

இரைச்சலில்லா...விடியல் சூன்யமாகிப்போனதெனக்கு...
உறக்கமில்லா இரவுகள்..தோறும்...
புங்கை மரம்...கிட்ட வந்து சலசலக்கும்
என் நினைவுகளிலது..பேசி சிரிக்கும்..
கிளிக் கூட்டம்...காதலாய் கிசுகிசுக்கும்....
வெறுமையாய் விடியும்...நிதர்சனக் காலையோ....
ஏனோ என்னை தனித்து நிறுத்தும்.....!


வெறுமையால் நிரம்பி நிரம்பி.....
வெறுத்துப் போனதென் வாழ்வு;
கிளிக் கூச்சல் கேட்காமல் செத்துப் போனது
என் உணர்வு....!
இதோ என் கால்கள்....வேறு வீடு தேடி.....
வாடகையினைப் பற்றி கவலையில்லை....
ஒரே ஒரு... நிபந்தனைதான்....
....
.......
........
......

"மரம் நிறைந்த வீடு
மனிதர்கள் குறைந்தாலும்
பறவைகள் அதிகமிருக்கவேண்டும் "
அவ்வளவுதான்...!



தேவா சுப்பையா...

Comments

Chitra said…
மனிதன், பல சமயங்களில் சுய நலவாதியாக இருந்து, தன்னலம் அமோகமாக இருக்க இயற்கையை பலிகொடுத்து விடுகிறான். :-(
Nice write -up!
""வேரோடு.... பெயர்க்கப்பட்டு....
அதுனை இலைகளும் திறந்த விழிகளாய்...
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!""

""வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனது புங்கை மரம்...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
பாதியிலேயே...முடிந்திருக்குமே....!""


இதை படித்துவிட்டு, எனது கண்ணே கலங்கிவிட்டதடா மாப்ஸ்...
எவ்வளவு கொடூரமான செயல்களை தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாததுபோல் காட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தால், வெட்கக்கேடாக இருக்கிறது...
AltF9 Admin said…
Eppudine unakkumaddum ipppadi yellam thenuthu , ondrai kondaal thaan innonru vaala mudiyum endra valvil naam nammai ariyamaleye namathu suya nalathukkaka kiliya piruchuranmla no problem inime punka maratha maddum illa entha marathaiyum vetta matten vetta matten vetta matten
தம்பி நல்லா இருகிறது மேலும் தொடரவும்.
பட்ட மரமாய் மனிதன்
விடாமல் துரத்தி கொண்டிருக்கிறது
மனிதனின் ஆசைகள் .
மனிதன் உயிர் வாழ மரம் முக்கியமாம் ?
ஆனால் மரம் வாழ மனிதன் என்ன செய்கிறான் ?
மரம் காடுகளை அழிக்கிறான் ??
நல்ல பதிவு நண்பா தொடர்ந்து எழுதுங்கள்

வீரா....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த