Skip to main content

சமத்துவ கனவு!

தொலைந்து போன நாட்களை...
நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்....
மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...
வருகிறது மனிதாபிமானம்...
இன்னும் ஒரு நாள் விடியட்டும்...
அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....

மதங்களின் போர்வை...
சுற்றிய மனிதர்கள்....!
சுய நலத்தை போர்வையாக்கிய
அரசியல்வாதிகள்...
காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்...
கெளவரவத்திற்கா ஓட்டுபோடத...
ஒரு படித்த கூட்டம்...
புறக்கணிப்பதாய் சொல்லி...
ஒதுங்கும் ஒரு கூட்டம்....
இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல்

கடைசி வீட்டுத் தாத்தாவின்
துருப்பிடித்த சைக்கிள்...
அடுத்த மழைக்குள்ளாவது
கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....
இரண்டுமே...
இந்திய வல்லரசு கனவு போல...!

உச்சிவெயில்...குண்டும் குழியுமான
என் கிராமத்து தார்ச் சாலை
மந்திரி வருக்கைக்காக
ஏழை வீட்டு மணபெண்ணாய்...
அலங்கரித்துக் கொள்கிறது....!
தெருவோர டீக்கடையில்...
ஒரு குவளை டீ குடித்து
உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...!

பழைய துணிபோட்டு...
பக்கெட் வாங்கும் அம்மணிகள்...
அம்மணமான குழந்தைகள்
துணி இல்லாமல்...
குடிசைகளின் ஓரங்களில்!
சீமான்களின் மீதமான உணவுகள்...
குப்பைத்தொட்டிக்கு போகாமல்...
என்று தான் நேராய்...
ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?
ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...
அடுத்தவேளை...
சோறில்லாமல் ஒரு கூட்டமும்...!
இப்படித்தான் சமத்துவம்...
சமாதியாயிருக்கிறது!

எல்லா முரண்பாடுகளுடன்...
என் மூளை மட்டும்
ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....
புரட்சியாய் என்னுள்...
உதிக்கும் எண்ணங்கள் எல்லஅம்....
பூமியை அடைவதற்கு முன்
அணையும் விண்வெளி கற்கள் போல...
செயலாவதற்கு முன் அழிந்து போகிறது...!

கற்ற கல்வியும்...
படித்த புத்தங்கங்களும்...
மக்களை விழிப்புணர்வு செய்ய...
முயன்று முயன்று...கடைசியில்...
முனை மழுங்கிய கத்தியாய்....!
மனிதர்கள் தங்களின்...
கோபங்களிலாலேயே... கொல்கிறார்கள்...
மனித நேயத்தை....!
நல்ல வீணைகள் எல்லாம்...
இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...
சுடர்மிகு அறிவுகள் எல்லாம்
இன்று முட்டாள்களின்...
கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!



சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!

பணம் உள்ளவர்களுக்கு அந்த பணமே...மேலும் மேலும் பணத்தை சம்பாரித்துக் கொடுப்பதால் ஏழைகளின் முன்னேற்றம் என்பது மிகக்கடினமாகவே இருக்கிறது. வெறும் காலோடு ஓடுபவனுக்கும் ஷு அணிந்து ஓடுபவர்களுகும் வித்தியாசம் இருக்கிறது. நாம் வேண்டுமானால் திரு.அப்துல்கலாமை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அவர் மேலே வரவில்லையா என்று இன்றைய கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவர்களை கேட்கலாம்....ஆனால் இத்தனை காலங்களில் ஒரு அப்துல் கலாமைத்தான் நாம் உதாரணம் காட்ட முடியும்....அவரும் மேல் தளத்திற்கு வர என்ன பாடுப்பட்டார் என்பதை அவரது அக்னி சிறகுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் மலர...இலவசமாய் பொருட்கள் வழங்கி மக்களை...சோம்பேறிகள் ஆக்காமல்... ஆக்கப்பூர்வமான தொழில் செய்யும் வாய்ப்புகள், மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கலாம்...! உழைத்து சம்பாதிக்கும் ஒருவன் அவன் சொந்தக் காசில் டி.வி. வாங்க மாட்டானா? அரசு தயவு செய்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்குவதை நிறுத்தி அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்வாதாரங்களைத் தொலைத்தவர்களுக்கு கடுமையான பரிசீலனக்குப் பின் இலவசமான உதவிகள் செய்யலாம்.

என்று எம்மக்கள் ஓட்டுகளுக்கு காசு வாங்காமல்......வாக்குச்சாவடிக்கு செல்கிறார்களோ அன்றுதான் ஒரு உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகும்....!


தேவா . S

Comments

Chitra said…
சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!

...... பலரின் மனங்களில் இதே உணர்வுதான்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த