Skip to main content

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் III !














போர்க்களம் போலத்தான் வாழ்க்கையும் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, எதிர்கொண்டு அடிவாங்கி,அடி கொடுத்து, அழுது,சிரித்து எல்லா பாவங்களோடும் நகரவேண்டியதாயிருக்கிறது. எப்போதும் கடந்த காலத்தை எண்ணி சந்தோஷப்படும் மனம்.. ஏன் நிகழ்காலத்தில் நிற்க மறுகிக்கிறது...? மேலும்...ஏன் எதிர்காலத்தை எண்ணிப் பயப்படுகிறது என்று...புரியாமல் எதற்காகவோ நொந்து எதற்காகவோ சந்தொஷப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்...!

சாதி பற்றி எழுதவேண்டும் என்று சாந்தமான மனோ நிலையில் முடிவு செய்து எழுதலாம் என்று அமர்ந்தால்.....காதலாய் கவிதைகள் வந்து விழுகிறது....உற்று...உற்று நோக்கினால் என்னையே ஏளனம் செய்து சிரிக்கிறது என் மனோ நிலை! அதானால்தான் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! இன்று ஒரு இறுக்கம் என்னைச் சூழ....இறுக்கத்தில் சாதிக்கு எதிரான சீற்றம் என்னை மீறி....வெளிப்பட...

இதோ....

இதுவரை

பாகம்I
பாகம்I I

இனி...

மனித வரலாற்றின் மிகப்பெரிய அபத்தம் அல்லது சதி இந்த சாதி! நூற்றாண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய் சாதி.....! ஆமாம் அந்த தொற்று நோயின் விளைவு காமாட்சி அண்ணனை சட்டையை கழற்ற வைத்திருந்தது....! நீங்க ஏண்ணே சட்டைய கழட்டுறீங்க...?என்ற கேள்விக்கு...அவர் அளித்த பதில் இன்னும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...ஆமாம்...யாரோ ஒருவர் அந்த ஊரில் இறந்துவிட அன்று இவர் சட்டையோடு வயலுக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வந்த மேல் சாதி என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் திரிகிற- ஒருவர்...ஏன்டா..ஊர்ல இழவு விழுந்து கிடக்குது.... நீ சட்டையப் போட்டுகிட்டு சந்தோசம் கொண்டடுறியோன்னு கேட்டு...காறித் துப்பி..அடித்ததை கண்ணீரை மறைத்துக் கொண்டு...மெல்லிய குரலில் சொல்லி விட்டு ..என்னை விட்டுத்தள்ளி வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.....

விக்கித்துப் போய்... நான் மாமா வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன்...பாதி பேர் சட்டையில்லாமலும்...மீதி பேர் சட்டையுடனும் தெருவில் நடந்து கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை... ! வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்ற அத்தையும் அவர்களது பிள்ளைகளையும் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்த நான் முதலில் கேட்ட கேள்வி...மாமா எங்க போய்ட்டாரு?ன்னு கேட்டேன்...? அந்த இறந்த வீட்டுக்கு சென்றதாக அறிந்து கொண்டேன்......காத்திருந்தேன்...! அந்த ஊர் பெரிய மனிதரில் ஒருவர்தானெ என்ன சொல்வார் என்று பார்ப்போம் என்று....சில உக்கிரமான கேள்விகளுடன்...


எதுக்கு மாமா? காமாட்சி அண்ணன் மட்டும் சட்டையை கழட்டணும்....? சரி துக்கம்னு சொன்னா எல்லோருக்கும் தானே....ஒரு லாஜிக்கா இருக்கணும்னா. .ஊர்ல இருக்க எல்லோரும் கழட்ட வேண்டியதுதானே.....? குளித்து விட்டு வந்த மாமாவை குளுமை அடங்கும் முன் உஷ்ணப்படுத்தினேன்....! முறுக்கிய மீசைகள் எல்லாம் மிரட்டத்தான் வேண்டுமா? சத்தியம் பேசாதா? வெள்ளைச் சட்டைகளும் வேட்டிகளும் தெருமுனைகளில் வீராப்பு பேசவும்....புஜபலம் காட்டவும்...மேடைகளில் முழங்கவும் தான? நீதி, அனீதி பற்றியெல்லாம் பேசாதா?

" அப்பு....இது காலம் காலமா பழகி போன ஒண்ணு....அவுக இப்படித்தேன் இருக்கணும்னு பெரியவுக சொல்லியிருக்காக...சட்டைய கழட்டணும்னு யாரும் சொல்லல அவுகளாத்தேன் செய்யுறாக...மரிவாதைப்பு...அம்புட்டுதேன்ன்னு சொல்லி விட்டு... நீங்க இன்னும் சாப்பிடலையன்னு..போய் சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவர் .. வேகமாக... ஏய் தம்பிக்கு சப்பாடு கொண்டு வா என்று அத்தைக்கு கட்டளையிட்டதிலிருந்து அவருக்கு இந்த பேச்சில் அக்கறை இல்லை என்று புரிந்து விட்டது.

அதுக்கப்புறம் நான் விருந்து சாப்பிட்டது...ஊர் சுத்துனது எல்லாம் இப்போ விசயம் இல்லை... ஆன...எனக்குள்ள " வேக வேகமா ஒரு வித பதட்டத்தோட காமாட்சியண்னன் சட்டையை கழட்டியது " இன்னும் மறக்க முடியல.....

ஒரு நாள் ஒரு நாள் வெயில்ல ஊர சுத்திட்டு...வந்தப்ப..பேச்சம்மை அக்கா வீடு பக்கமா இருக்கேன்னு அங்க போயி ….”பேச்சம்மை அக்காவிடம் ஒரு சொம்பு தண்ணி கொடுங்கக்கா...இந்த பக்கமா வந்தேன் ஒரே தாகமா இருக்குன்னு கேட்ட பின் அந்த அக்காவின் முகத்தில் நான் பார்த்தது ஒரு நூற்றாண்டு ஆச்சர்யத்துடன் கூடிய அதிர்ச்சியும் மலர்ச்சியும்....." !

எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க...என்னோட முதுகு தண்டு சில்லிட்டுப் போச்சு.....

நம்ம வீட்ல குடிக்கிற தண்ணி இவ்ளோ சுத்தமா இருக்குமான்னு நானே கேள்வி கேட்டு கிட்டு... நான் குடிச்ச தண்ணீல வயிறு மட்டு நிறையல...என் மனசும்தான்....! இன்னும் எத்தனை... எத்தனையோ சாதிக் கொடுமைகளை பற்றி ரொம்ப விலாவாரியா நான் சொல்லிகிட்டே போறதுல அர்த்தம் இல்ல பாஸ்....! அப்படி சொன்னா அது உணர்ச்சிய தூண்டுமே தவிர நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வினை தூண்டாது.....!

கொடியன் குளத்தில் நடந்த பிரச்சினையையும்..., தீண்டாமை காரணமா ரெண்டு கிளாசுல டீ குடுத்ததையும்...பேசி பேசி... நகர்ந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை......! சாதியே இல்லாத திராவிட இனத்தின் தொடர்ச்சியில் எந்த இடத்தில் சாதி என்ற சதி வலை பின்னப்பட்டது என்று விவாதிப்பதும்....வரலாற்றுப் பிழைகளை பிரித்தெடுத்துப் பார்ப்பதும் கட்டுரையின் இலக்கல்ல....

ஆனால்...எதை சொல்ல நினைத்தேனோ....எது நமது இலக்கோ அதற்கான உந்து சக்தியாய் இரண்டு பின்னூட்டங்கள் யரோ இரு தோழர்களால் இடப்பட்டு இருக்கின்றன....

அந்த பின்னூட்டங்களை கையில் எடுத்து கொண்டு....மீண்டும் ஆக்கப்பூர்வமாக நமது இலக்கு நோக்கி டாப் கியரில் பயணிப்போம் தோழர்களே....

பின்னூட்டம் 1

K.ஜெயதேவா தாஸ் கூறியது.....

" ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. "

பின்னூட்டம் 2

ஸ்மார்ட் என்பவர் கூறியது...

" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.

பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல "

இவர்களின் பின்னூட்டங்கள்தான் நாம் பயணிக்க வேண்டிய..விவாதிக்க வேண்டிய இலக்கு....! அரோக்கியமான விவாத களமாக, அறிவுசார் களமாக இது சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில்..மேலும், மெலும் சிந்தனையைத் தூண்டச் செய்யும் அளவிற்கு பின்னூட்டமிட்ட தோழர்களுக்கு நன்றி சொல்லி....அடுத்த பதிவில் கிட்டதட்ட நமது இலக்கினை ஏக தேசமாக நெருங்கி விடுவோம் என்ற உறுதியோடு... காலஙகள் தாண்டி புரையோடுப் போயிருக்கும் ஒரு விசயம் ...அன்போடு காத்திருங்கள்...அடுத்த பதிவிலே... நிறைவினை எட்டுவோம் என்ற உறுதியோடு....இப்பொது தற்காலிகமாக நிறுத்துகிறென்!

(நெருப்பு....இன்னும் பரவும்)



தேவா. S

Comments

மிகச்சரியான பாதையில் உங்கள் கட்டுரை பயணித்திக்கொண்டிருக்கிறது.இன்னும் தொடரட்டும் தேவா.
தோழர் ஸ்மார்ட் அவர்களுக்கு...எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே! இது உங்களின் கேள்வி.

தோழர் அவர்களே கேள்வி கேட்பது சுலபம்தான். சரி நீங்களே சொல்லுங்கள்.வேறு யார் யாரல்லாம் சாதியை ஒழிக்க போராடினார்கள் என்று?

உங்களுக்கு சில உதாரணங்கள்:
1957-ல் என்ன வசதிகள் இருந்திருக்க முடியும்? பெரியார் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு வாருங்கள் என 20 நாட்கள் இடைவெளியிலே தஞ்சாவூரிலே மாநாடு போட்டு அறிவிக்கின்றார். அந்த 20 நாளிலே சட்டமன்றம் கூடி விவாதித்து 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என அறிவித்து பயமுறுத்திய நிலையிலேகூட 10000 பேர் சட்டத்தை எரித்தார்கள்.

1970ல் தந்தை பெரியார் தமிழகத்தில் கோயில்களில் நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை கண்டித்து கருவரை நுழைவு கிளர்ச்சி போராட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என அறிவித்தார். அப்போது முதல்வராகயிருந்த மு.கருணாநிதி, அய்யாவை எங்களது அரசு கைது செய்ய முடியாது. அதனால் அவரின் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றார்.
சாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள வேறுபாடு

23.10.1961- அன்று காரைக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- "விடுதலை" 04.11.1961. நூல்:-"பெரியார் களஞ்சியம்" தொகுதி - 15-(ஜாதி-தீண்டாமை: பாகம்
http://www.tamilankural.com/publ/1-1-0-52
சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித்தருவார்கள் பள்ளியில் ஆனால் அந்த பள்ளியில் படிக்க சாதி சான்றிதல் தேவை...இதுதான் இங்கு நடப்பது.
ஜாதி பற்றி பேசுவோர் அவர்கள் பையனுக்கு பொண்ணுக்கு வேறு சாதியில் கல்யாணம் செய்ய வேண்டும்,
Chitra said…
////எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க...என்னோட முதுகு தண்டு சில்லிட்டுப் போச்சு.....////


..... நேரில் இருந்து பேசி கொள்ளும் விதத்தில் இருக்கும் உங்கள் எழுத்து நடையும், சம்பவ விவரிப்புகளும், கருத்து செறிவும் உங்களை இன்னும் பாராட்ட வைக்கிறது.... வாழ்த்துக்கள்!
vasu balaji said…
மிகவும் முக்கியமான ஆழமான பிரச்சனைதான். ஜாதி இருந்தாதானே அரசியல். இதை அவங்க ஒழிக்க வழி பண்ணுவாங்கன்னா நினைக்கிறீங்க? அடிப்படையா சிவில் சட்டமே மதத்தையும், அதில சில விதி விலக்கு ஜாதியை வச்சுமே இருக்கும்போது ம்ம். பார்க்கலாம். விவாதம் எப்படி போகுதுன்னு.
Kousalya Raj said…
அந்த நெருப்பு (வெறுப்பு ) பலரின் மனதிலும் இருக்கிறது, எனக்குள்ளும்!! தொடருங்கள்...!
ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் சரிதான் பாஸ்.
விஜய் said…
அண்ணா , இந்த பதிவு ரொம்ப அருமை அண்ணா, மெய் சிலிர்க்க வைத்துட்டீங்க.

//எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க..//

இந்த வரிகள் மிக அழகா இருக்கிறது..ஜாதி இல்லைனா எப்படி இருக்கும் என்பதை மேல கூறிய வரிகளில் அழகாய் எடுத்து சென்று இருக்கிறீர் அண்ணா வாழ்த்துக்கள்,

இந்த பதிவின் இறுதியை படிக்க அவ்வளவு ஆர்வமாய் இருக்கிறது ,

நீங்க கலக்குங்க அன்ன, நான் முன்னையே சொன்ன மாதிரி நீங்க ஜாக்கி ஜான் , நான் ஜேடன்..சரியா அண்ணா
சாதியை ஒழிப்பது என்பதை விட சாதி பற்றிய நம்பிக்கைகளை கலைவது என்பது எளிதாக இருக்கும். முதலில் மேல் சாதி , கீழ் சாதி என்பதை பற்றிய ஆராய்ச்சி தேவை. மேல் சாதி காரர்கள் என்று கூறப்படும் அனைவரும் கொடுமையானவர்கள் என்பதை காட்டிலும் ஒரு சிலரே சாதி என்னும் மதம் பிடித்து அலைகின்றனர் என்பதே உண்மை . அவர்களின் சாதி வெறியினை குறைக்க நிச்சயம் பகுத்தறிவு தேவை . முட்டாள்களிடம் என்னதான் நாம் சொன்னாலும் கேட்கப்போவது இல்லை. அவர்களுக்கு புரியும் வகையில் தெரிவிப்பதுதான் நாம் செய்ய வேண்டியது.. இன்னமும் தங்களை தாழ்த்திக்கொண்டும் , மேல் சாதி என்று கூறப்பட்டவர்களை கும்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நிச்சயம் இவர்களும் பகுத்தறிவு பெற வேண்டும் .. தற்பொழுது ஓரளவு முன்னேற்றம் வந்து கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும் தாங்கள் கூறுவது போல சட்டை போடாமல் இருப்பதும் , மேல் சாதிகாறாக்கள் வரும் போது எதிரில் செல்லாமல் இருப்பதும் தற்போது காண்பது அரிது என்பதே எனது கருத்து ..!!
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
தேவா உங்களின் அலசல் அருமை. முதலில் எமது தமிழ்ச் சமூகத்திடம் இப்போதும் பதியம் போட்டிருக்கும் ‘’பெரியவங்க சொன்னாங்க. அதான் அப்பிடிப் பண்ணுறோம்’ எனும் மூட நம்பிக்கையைக் இல்லாதொழிக்க வேண்டும். அதற்குப் பாட நூல்களின் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்னொரு விடயம்- தமிழ் நாட்டில் காலேஜ் எனப்படும் கல்லூரிகளில் சேர்வதற்கே உயர் குல மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை இன்னமும் காணப்படுவதாக அறிந்தேன். அப்படியான அடி முட்டாள் தன, பகுத்தறிவற்ற் ஒரு சில அரசியல்வாதிகளினதும். காலேஜ் நிர்வாகத்தினரதும், கோயில் நிர்வாகங்களினதும் சாதியம் பற்றிய கொள்கைப் பிடிப்புக்கள் இறுக்கமாக இருக்கும் வரை இச் சாதியத்தை இல்லாது ஒழிக்க முடியாது என்பது எனது கருத்து. படித்தவர்கள், இலத்திரனியல் ஊடகங்களைக் கையாளும் அறிவாளிகள் போன்றோர் ஒன்றிணைந்து பிரச்சாரங்களைச் செய்தால் தான் இத்தகைய கீழ்த்தரமான கொள்கைகளை இல்லாது ஒழிக்க முடியும்!
ஏன் உங்க கோயிலுக்கை மயில்ச்சாமியை விடுறீங்கள் இல்லை? இப்படி ஒரு கேள்வியை நானும் திருச்சிக்குப் போன போது சாந்தி அம்மா எனும் கோயில் நிர்வாகியிடம் கேட்டேன். அவா சொன்னா! அவங்க கீழ்ச் சாதிக்காறங்க. அவங்களை உள்ளே விடக் கூடாது. பெரியவங்க சொன்னாங்க. கீழ்ச் சாதிக் காறரை அனுமதிக்க கூடாது என்று?


இதிலை வாற பெரியவங்களைப் பற்றிய மூட்ட நம்பிக்கை, பெரியவங்கள் சொன்னாங்கள் என்கிற மூட நம்பிக்கை தான் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி வெறிக்குக் காரணமாக உள்ளது.


இந்தியாவில் சாதிப் பாகுபாடுகள் இல்லை என்று சொல்பவர்களுக்காக நண்பர் கிருத்திகன் குமாரசாமியின் வலைப் பதிவில் இருந்து ஒரு லிங்கினைத் தருகிறேன். அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள்.

http://kiruthikan.blogspot.com/2010_05_01_archive.html

இது தான் இந்தியா ஒளிர்கிறது என்பதன் மறுவடிவம்!

http://kiruthikan.blogspot.com/2010_05_01_archive.html
Sri said…
மனித வரலாற்றின் மிகப்பெரிய அபத்தம் அல்லது சதி இந்த சாதி!!!!!மனித வரலாற்றில் என்பதை விட தமிழன் வரலாற்றில் என்று சொல்லலாம்......

நாம் எம்மால் முடிந்தளவு மாற்றுவோம்...
Rule the World
Unknown said…
தமிழ் மதுரம் தந்த தொடுப்பு எனக்கு ஈரோடு தமிழன் மூலமாகக் கிடைத்தது என்பதைச் சொல்லிக்கொள்ள விளைகிறேன்.

நன்றி.

///பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல///
இன்றைக்குப் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு அராஜகம் செய்கிறவர்கள் பெரியாருக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் (சாதியை ஒழிக்க போராடிய தாடிக்காரக் கிழவனை சாதிவெறிபிடித்த தாடிக்காரக் கிழவன் என்று எல்லோரும் நினைக்கும்படி ஆக்கியது இந்த பெரியாரிஸ்ட் கும்பல்தான். திருந்துவார்களா இன்றைய போலிப் பெரியாரிஸ்டுகள்?
thiagu1973 said…
//நம்ம வீட்ல குடிக்கிற தண்ணி இவ்ளோ சுத்தமா இருக்குமான்னு நானே கேள்வி கேட்டு கிட்டு... நான் குடிச்ச தண்ணீல வயிறு மட்டு நிறையல...என் மனசும்தான்....! இன்னும் எத்தனை... எத்தனையோ சாதிக் கொடுமைகளை பற்றி ரொம்ப விலாவாரியா நான் சொல்லிகிட்டே போறதுல அர்த்தம் இல்ல பாஸ்....! அப்படி சொன்னா அது உணர்ச்சிய தூண்டுமே தவிர நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வினை தூண்டாது.....!//

உண்மைதான்
சல்யூட் தேவா!
Anonymous said…
நீங்க என்ன சாதி சார்? பாக்க தேவமார் மாதிரி இருக்கீக. பயமாயிருக்கு.

சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.

இப்படிக்கு
தங்கள் அடிமை

பள்ளமாரிலே ஒருத்தங்க
dheva said…
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!
dheva said…
கருத்து நாம் நினைத்ததை பகிர்வது...இதற்கு பெயர் சொல்லாமல் வரவேண்டிய அவசியம் இல்லை தோழரே.....

இரண்டாவதாக.....சாதியே இருக்க கூடாது என்ற நோக்கில் எழுதிய கட்டுரைகு சாதிச் சாயத்தோடு ஒரு கருத்து சொல்வதின் பிண்னனி என்ன? கட்டுரையின் எல்லா பாகங்களையும் படியுங்கள் நண்பரே....!

வாழ்த்துக்கள்!
@@Anonymous சாதி இருக்க கூடாது என்று தான் இந்த பதிவு இதில் சாதி சண்டை கொண்டு வராதீர்கள்... பெயர் இல்லாதவரே.....
நீங்க என்ன சாதி சார்? பாக்க தேவமார் மாதிரி இருக்கீக. பயமாயிருக்கு.

//சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.

இப்படிக்கு
தங்கள் அடிமை

பள்ளமாரிலே ஒருத்தங்க// படிச்சுட்டுத்தான் வேண்டும்னே கமெண்ட் பண்ணியிருப்பாய்ங்க.

இந்த கொசுத்தொல்லைங்க தாங்க முடியல. எங்கயாச்சும் இவிங்க அரிப்ப தீத்துக்கலண்ணா தூக்கம் வராது போல.
விஜய் said…
ஏன் அப்பு உங்களை மாதிரி ஆளுங்களுக்கு தான் அண்ணா இவ்வளவும் எழுதி இருக்காரு, வேதாளம் முருங்க மரம் ஏறுன கதையா, நான் பள்ளமாரிலே ஒருத்தங்க, நீங்க தேவரான்னு கேட்டு இருக்கியே..

சாதிங்கற ஒன்னு வளருவதே உங்களை மாதிரி இருக்குற ஒரு சில
விஷ செடியால தான், இந்த விஷ செடிய வெட்டி எரிய யோசிக்கிறது தான் எங்க பலவீனம் என நீ நினைத்தால் அது உங்க முட்டாள் தனத்த காட்டுது அப்பு ..

என் தேசத்துக்காக உங்களை மாதிரி விஷ செடிய கலை எடுக்கவும்
தயங்க மாட்டோம் அப்பு..

எழுத்துளையே இவ்வளவு தீ எரிய வைக்ரவங்க நாங்க...
கொஞ்சம் கமெண்ட்ஸ் போடறதுக்கு முன்னாடி யோசிசுக்கப்பு ...
@ Anonymous

நல்லவேளை, ஜாதி பற்றி பேசினால் பெயர் கெட்டுவிடுமுனு நினைச்சி முக்காடு போட்டுட்டு வந்து ஜாதி கேட்டு இருகாருயா.

பரவாயில்லை, அந்த பயம் இருந்தா போதும், இந்தியா சீக்கிரம் முன்னேறிடும்
//Anonymous said...
நீங்க என்ன சாதி சார்? பாக்க தேவமார் மாதிரி இருக்கீக. பயமாயிருக்கு.

சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.

இப்படிக்கு
தங்கள் அடிமை

பள்ளமாரிலே ஒருத்தங்க//

தைரியம் இருந்தா உங்களோட உண்மையான பேர போட்டு பின்னோட்டம் போட்டிருக்கணும் .. இப்படி எதுக்கு ..?
ஓ. .. உங்களுக்கு இன்னும் பேரே வெக்கலையா ..? அதுக்குள்ளவே உங்களுக்கு என்ன ஜாதின்னு சொல்லி அத பத்தி எழுத சொல்லீட்டாங்களா ..? சரியான காமெடி பீசுங்க நீங்க .. ஜாதி இல்லப்பா , அது வேண்டாம் அப்படின்னா , அதெல்லாம் முடியாது எங்க ஆத்தா வையும் எனக்கு ஜாதி வேணும் அப்படின்னு சொன்னா என்ன பண்ணுறது ..
//தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.//
இப்படி பயப்படாம எல்லோரும் ஒத்துமையா வாழணும்னு தான் நாங்க ஆசை படுறோம் ..
ஆனா நீங்க எப்படி எழுதினாலும் நாங்க அதைய கிண்டல் பண்ணுவோம்னா பண்ணுங்க .. நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.. எங்களோட இலக்க நோக்கி நாங்க போயட்டேதான் இருப்போம்..!
marathamizhan said…
தேவா,

நன்றாக எழுதியிருக்கிங்க..

தொடரட்டும் உங்கள் முயற்சி..

வாழ்த்துக்கள் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல