Skip to main content

நீ எனக்கு யாராம்...?






















கிழக்கும் மேற்கும் திசைகளென்றேன்
நீ திசைகளென்ற ஒன்றே இல்லையென்றாய்,
வானம் முழுதும் நட்சத்திரம் என்றேன்..
வானம் என்பதே பொய் என்றாய்....
பூமியின் சுழற்சி இடமிலிருந்து வலமென்றேன்
அதுவும் ஒரு நாள் மாறுமென்றாய்,
பகலில் அத்தனையும் அழகு என்றேன்
பகலென்பதும் மட்டுமன்றி பகலவனே பொய்யென்றாய்!

நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்

எல்லாம் முரண்களாக கொண்டு
எப்படி இயங்குகிறோம் ஒன்றாய் என்பேன்?
இயக்கம் என்பதில் முரணில்லை என்பாய்
நான் உன்னிடம் நெருங்கி வருவேன்
என் நெஞ்சினில் கூராய் கத்தியைச் சொருகுவாய்
உன்னை விட்டு தூரப் போவேன்...
தாயாய் என்னைக் கட்டியணைப்பாய்..!

நட்புமில்லை என்றாய், காதலுமில்லையென்றாய்
உறவுகளற்ற உணர்வென்றாய்
தளிர்களற்ற செடி என்றாய்
கனவுகளற்ற உறக்கமென்றாய்
கவிதைகள் இல்லா காதல் என்றாய்
சொல்லும் போதே செத்து விடும்
வார்த்தைகளை நீ மதியேனென்றாய்;
நான் இருக்கிறேன் என்றாய்
உடனேயே நான் இல்லை என்றாய்;
சோகம் என்றாய் ஆனால்...
அதில் சந்தோசம் என்றாய்!

எப்படி உன்னை கணிப்பதென்றேன்?
என்னை ஏன் கணிக்கிறாய் என்றாய்..?
நீ எனக்கு யாரென்றேன்?
காற்று உனக்கு யாரென்றாய்?
நான் திகைக்கிறேன் என்றேன்..
நீ நகைக்கிறேன் என்றாய்!

கடைசியில்...

எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?

இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?


தேவா. S


Comments

.....ஹம்ம்ம்ம் சூப்பர் கவிதை.. எதிர் எதிர் துருவம் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது இது தானோ?? :-))
நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்///

இதெல்லாம் நீங்க சொல்றதாச்சே...!!!
எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?

இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?////

அதானே தேடிட்டு தேடிட்டு .......அவங்க அழுதாங்க சரி

நீங்க ஏன் சொல்லு சொல்லு அழுவுறீங்க....

@@@யாரோக்கோ

அட நீங்க யாருன்னு சொல்லுங்க.....
Chitra said…
இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?


..... ஒண்ணு விட்ட அக்கா மகள் என்று நினைக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....
Chitra said…
அருமையான கவிதைங்க, தேவா.
dheva said…
//ஒண்ணு விட்ட அக்கா மகள் என்று நினைக்கிறேன். //

Chitra @ ROFL
Mohamed Faaique said…
யாருண்ணே அவ? ரொம்ப குழப்புறா??/? கோக்கு மாக்கா பேசனும்’னு நேர்த்திக் கடனோ!!!!

அருமையான வசன நடை.. போட்டோவும் சூப்பர்...
சிசு said…
நல்லாருக்கு....

//நீ எனக்கு யாராம்?//
அவுங்களா இருப்பாங்களோ... :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த