Skip to main content

ஹாய்....18.06.2011!



















எப்பவும் சொல்றதுதான் இப்பவும் நியதிகளுக்குள் நின்று கொண்டு முடிக்க வேண்டும் என்பது எல்லாம் வாழ்க்கையின் நடைமுறை செயல்களுக்காகத்தான் செய்தாக வேண்டும். கதையும், கட்டுரையும், கவிதையும் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இது எனது ஓய்வு இடம். இது என்னுடைய ராஜாங்கம். நான் என் நினைவுகளின் சக்க்ரவர்த்தி. எனக்கு என்ன தோணுதோ அட்லீஸ்ட் அதை இங்கேயாவது செய்ய வேண்டும், ஆனால் வாழ்க்கையில் அப்படி முடியாது. புற வாழ்க்கை எப்போதும் மனிதத் தொடர்புகள் கொண்டது. உங்களுக்கும் எனக்கும் தேவை இருக்கிறதோ இல்லையோ இந்த சமுதாயத்தின் குரல்களையும், அதன் செம்மைகளையும், முரண்களையும், அசிங்கங்களையும் கேட்டுக் கொண்டோ அல்லது பார்த்துக் கொண்டோ தான் நகர வேண்டும். வேறு வழி கிடையாது.

புறம் இப்படி இருக்கையில் என் அகத்திற்குள் தேவையென்றால் மட்டுமே நான் மனிதர்களை அனுமதிக்கிறேன். புறத்திலே பற்கள் காட்டி வேறு வழியில்லை என்னை சுற்றி நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று பழிப்பு காட்டும் மனிதர்களும் சூழல்களும் என் அகத்தில் அடி பட்டு தூரத்தில் தள்ளியே வைக்கப்படுகின்றனர் எப்போதும்...

என் ஏகாந்த சிறகுகள் என் விருப்பப்படியே விரியும். தேவைகளற்றுப் போனால் சிறகு மடக்கி ஒரு ஓரமாய் உறங்கும். இங்கே எனது தேவைகளை முடிவு செய்ய என் உள்ளுணர்விற்கு முழு சுதந்திரம் உண்டு.

பொருளை முன்னிலைப் படுத்தாது, மன நிம்மதியை முன்னிலைபடுத்தும் ஒரு மிகப்பெரிய ஏற்பாடு ஒன்று தன்னிச்சையாக இங்கே தீர்மானமாக்கப்பட்டு அது இட, வலம், மேல், கீழ் என்று எல்லா திசைகளிலும் அலைந்து கடைசியில் ஒரு ஓரமாய் சுருண்டு என்னை மனம் மனதை உற்றுப் பார்க்கிறது. அந்த தருணத்தில் நிம்மதி சிறகுகளை பூட்டிக் கொண்டு எங்கோ இல்லாமல் இருக்கும் சுகமும் கிடைக்கிறது.

முழுக்க முழுக்க இப்படிப்பட்ட ஒரு அக வாழ்க்கையில் நிர்ப்பந்தங்களற்று எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருப்பது கண்டிப்பாய் மறுக்க முடியாதது. நூறு பேருக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து யோசித்து எழுதுவது ஒரு வகை. இதில் தவறு இல்லை.

ஆனால்....

எனக்கு பிடிக்கிறது, நான் இப்படித்தான் எழுதுவேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாசியுங்கள் என்று எண்ணுவது இன்னொரு வகை. இந்த வகையைப் பற்றிக் கொண்டே பெரும்பாலும் நான் ஊர்கிறேன். அதனாலேயே தோணும் போது எல்லாம் தோணுவதை எழுதி கொண்டு நகர்கிறோம். பலத்த கை தட்டல்கள் பெரும்பாலும் எனக்கு பயத்தையே வரவழைக்கின்றன.

ஆமாம்.

மனிதர்கள் எந்த அளவு இனிமையானவர்களோ, அந்த அளவுக்கு கொடுமையானவர்களும் கூட என்ற கூற்றை யாரும் மறுக்க முடியாது. பொதுவான நியதிகளைப் பின்பற்றி தனக்கு பாதகமாயிருப்பினும் அதை ஏற்றுக் கொண்டு உண்மையின் பக்கம் நிற்பவர்கள் சொற்பமானவர்கள் தான்.

ஒரு செய்தியோ, அல்லது நிலைப்பாடோ அல்லது சூழலோ தனக்கு முரணாயிருக்கிறது என்று ஒரு மனிதன் உணரும் போது அங்கே இருக்கும் சத்தியத்தை எப்போதும் அவன் பார்ப்பதில்லை. மாறாக கடும் கோபம் கொள்கிறான். நேற்று வரை பாராட்டிப் பேசியவர்களை தூக்கியெறிந்து விடுகிறான்.

காட்சிகளும் வார்த்தைகளும் எப்போதும் மனிதர்களுக்கு சரியான செய்திகளைப் பகிர்வது இல்லை, ஆனால் இதை வைத்த்துக் கொண்டுதான் நாம் அடுத்தவருக்கு புரிய வைக்கிறேன் பேர் வழி என்று களமிறங்கி கத்திக் கத்திப் பேசி, காட்சிப் படுத்தி, எழுதி ஏதேதோ அபத்தங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

மாற்றத்தின் வேர்கள் பெரும்பாலும் வெளியில் இல்லை அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது. சத்தியமும், உண்மையும் தேவை என்று ஒருவன் உணரும் போது, ச்சே...என்னடா லைஃப் இது என்னத்த கொண்டு போகப் போகிறோம் என்ற இடத்தினை அறியும் போது அவனுக்குள் இருக்கும் இந்த சாஃப்ட்வேர் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அதனால் தான்.. அறிவின் நிலைக்கு ஏற்ப கருத்துக்களின் சாரம் ஒரு மனிதனால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஒரு அறிவு நிலையில் நிலவு அம்புலியாகிறது. மறு அறிவு நிலையில் உயிரற்ற கோளாகிறது. இன்னுமொரு புரிதலில் நம்மை விட சக்தி வாய்ந்த உயிரோட்டம் அங்கும், இங்கும் எங்கும் இருப்பது புரிகிறது.

கலீல் ஜீப்ரான் கூறியதை போல மனித மூளையே எல்லா மேஜிக்கையும் செய்கிறது. நேற்று நல்லவன், இன்று கெட்டவனாகிறான். அதே கெட்டவன் அப்படியே இருப்பானா...? என்றால் அதுவும் கிடையாது மீண்டும் அவனை நல்லவன் என்று நாமே கூறுவோம். இதை எல்லாம் தாண்டி ஒரு சத்தியத்திற்குள் மனிதன் வர அவனது ஈ.கோவை விட்டொழிக்க வேண்டும்.

என் கண் முன்னே பலரின் பகட்டுக்களை பார்க்கிறேன். தன் உத்தியோகம் இதுவென்றும், தம்மிடம் இவ்வளவு வசதிகள் இருக்கிறது என்றும், தங்களின் பகட்டுக்களை இப்படி, அப்படி என்று மறைமுகப்படுத்தி அடுத்தவர்களிடம் சொல்வதன் மூலம் தங்களது ஈகோவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

நேரமே எனக்கு இல்லை என்று கூறும் மனிதர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது. அவரவர் மனாசாட்சிக்குத் தெரியும் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம், மேலும் நமது நேரத்தினை எப்படியெல்லாம் அன் புரடக்டிவிட்டியில் செலவழிக்கிறோம் என்று.

என்னுடைய ஒரே ஆச்சர்யம் இதுதான்....எனக்கு நேரமில்லை என்று சொல்லும் போதே அவரவர் மனசாட்சிகள் அவரை குத்துமா அல்லது அல்லது பாராட்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க " என்பது இரண்டு மார்க் கேள்விக்கான பதிலாய் பலருக்கு ஆகிப் போய்விட்டது. பேசிப் பேசி வெளியே வந்து விழுந்து விட்டேன் பாருங்கள் இப்படித்தான்...

எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்து அறிந்த விசயங்களின் அனுபவங்களில் இருந்து கிடைக்கும் சாரத்தினை வைத்து ஒரு கருத்து சொல்லி விடுகிறது மனது. அங்கும் இங்கும் எங்கும் மனிதக் கூட்டங்களுக்குள் முண்டியடித்துக் கொண்டு சப்தமாய் ஏதேதோ பேசும் பொழுதே உள்ளே இருந்து ஒரு அழைப்பு மணி... அடித்துக் கொண்டும் இருக்கிறது.

அகங்காரம் வளர்க்க பேசுகிறாயா? இல்லை அறுக்கப் பேசுகிறாயா என்று மேலும் கீழும் தலையசைத்து மெளனமாய் ஒரு தன்முனைப்பு எச்சரிக்கை செய்கிறது. அதைக் கண்டும் காணாதது போல மனம் மேலும் மேலும் வெளியேறிச் சென்று கொண்டே இருக்கும் போது சடாரேன்று உள்ளிருந்து கேட்கும் குரலின் சத்தியத்தை உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு மீண்டும் உள்நோக்கி ஓடி வார்த்தைகளை எல்லாம் ஒடித்துப் போட்டு விட்டு...

அம்மா அதட்டும் போது கையைக் விரித்துக் காட்டி ஒன்றும் செய்யலையே.. என்று சிறுவயதில் சொல்வதைப் போல எனக்கு நானே கூறிக் கொள்கிறேன்.

ஒரு மையக்கருத்தோடு ஆரம்பித்து மையக்கருத்து இல்லாமல் அலைந்து மீண்டும் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு செல்கிறேன். " ஹார்மோன் செய்யும் கலகம் தானடா " என்ற ஒரு தொடரும், " ஆன்மாவின் பயணம் " என்ற தொடரும் தூக்கத்திலிருந்து விழித்த குழந்தையாய் என்னை இப்போது தொந்தரவு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த அடுத்த பாகங்களை இம்மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்துக்குள் எழுதி முடிக்கலாம் என்று ஒரு முடிச்சு விழுந்துள்ளது. பார்க்கலாம்.....திட்டங்கள் எல்லாம் நாம் தீட்டுவோம் ஆனால் நடைபெற சூழலும், மனமும் ஒத்துழைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறையிடம் இந்த தீர்மானத்தை விட்டு விட்டு....

நான் கிளம்புறேங்க...! உங்களுக்கும், வீட்டிலிருக்கும் எல்லா உறவுகளுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

அப்போ....வர்ர்ர்ட்ட்டா!


தேவா. S


Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த