Skip to main content

பாஸ்போர்ட்....!



















கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு ஊர்ல போயி பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணினா சரியா வருமா? இல்லை துபாய்லயே பண்ணிட்டு போயிடலாமான்னு...இருந்தாலும் ஒரு அலுப்பு சரி ஊர்ல போய் பாத்துக்கலாமேன்னு நம்பி வண்டியேறிட்டேங்க.....

ஒரு மாசம் லீவு. பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணி டக்குனு கிடைக்கணுமேன்னு சொல்லிட்டு விசாரிச்சு பாத்தப்ப, ட்ராவல்ஸ்ல கொடுக்கலாம்னு அப்பா சொன்னாங்க. நாமதான் ஊர்ல இருக்குற எல்லா கான்சுலேட்டுக்கும் போயிருக்கோமே நாம எதுக்கு ஏஜண்ட் கிட்ட எல்லாம் போகணும்னு சொல்லிட்டு (எம்புட்டு திமிரு எனக்கு!!!!) நோ..நோ நானே நேரா போயி திருச்சில ரினிவ் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். போன்ல என்கொயரி பண்ணினதுக்கு 14 வேலிட் டாகுமெண்ட்ஸ்ல கண்டிப்பா 3 ஒ அல்லது 4 ஒ டாகுமெண்ட் வேணும்னு சொல்லிட்டாங்க....(செக் பண்ணத்தான்..)

நானும் ரேசன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடி இது எல்லாம் கரெக்டா எடுத்து வச்சிகிட்டு காலையில 4 மணி பஸ்ஸுக்கு கிளம்பிட்டேன். எங்க ஊர்ல இருந்து காலையில கிளம்புனா ஒரு 8 அல்லது 9 மணி வாக்குல திருச்சி போயிடலாம். ஆனா 4 மணி பஸ்ஸ பிடிக்க 3 மணிக்கு எல்லாம் எழும்பணும்ல அப்போ எப்டி பாத்தாலும் தூக்கம் வராது நைட் புல்லா சரிதான?

கோழி கூப்ட கிளம்புனவன் ஒரு எட்டு மணிக்கு எல்லாம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துகு வந்து எதித்தாப்ல இருக்குற ஹோட்டல்ல பூரி செட் வாங்கி கிழங்குல கை வைக்கிறப்பதான் தெரியுது அடா அடா போட்டோ இல்லையே நம்மகிட்டனு....நல்ல வேளை கடைக்கு பக்கத்துலயே ஒரு ஸ்டூடியோ...இருந்துச்சு. அப்டி இப்டி கடைய அந்தப் பையன் திறந்து அந்த கடையில வேலை பாக்குற பொண்ணுக கூட பேசி பேசி...டி ய வாங்கி குடிச்சு புட்டு ...வேலைய செய்ய இஷ்டமே இல்லமா அந்த பொண்ணுக கிட்ட பேசுறதுலயே குறியா இருந்தாப்ல...

ஒரு வழியா போட்டோவ வாங்கிகிட்டு இன்னொரு பஸ்ஸ பிடிச்சு மரக்கடை ஸ்டாப்பிங்கல் இறங்கி பாஸ்போர்ட் ஆபிசுக்குள்ள நுழைஞ்சு அப்ளிகேசன் ஃபார் ரினிவல் எங்க கிடைக்குமுங்கனு கேட்டேன் ஒருத்தர் கிட்ட....அவர் சொன்னாரு அட இப்போ அப்ளிகேசன் எல்லாம் இல்லங்க கம்ப்யூட்டர்லயே அடிச்சு பாரம் புல்லப் பண்ணி கொண்டு வரணும் (ஆன் லைன்)அந்தா அங்கிட்டு பாருங்க எக்ஸ் சர்வீஸ் மேன் எல்லாம் அந்த சாமியானா பக்கத்துல இருக்காங்க அவுங்க அடிச்சு கொடுப்பாங்க..அப்டி இல்லனா அந்தா எதித்தாப்ல கடை இருக்கு அங்க போயி அடிங்கனு அவர் கை காட்டி சொன்ன இடத்துல இலவசத்துக்கு காத்து கிடக்குற மாதிரி ஒரே கூட்டம்....

அடக் கொடுமையே என்ன இது...இப்டி இருக்குனு சொல்லிட்டு நான் பக்கத்துல எதுனாச்சும் பிரவுசிங்க் சென்டர் இருக்கும் அங்க போயி நாமளே அடிச்சுக்குவோம். நாம பாக்காத ஆன்லைன் பார்மான்னு பாஸ்போர்ட் ஆபிசுக்கு வலது பக்கம் 2 கிலோமீட்டர் இடது பக்கம் 2 கிலோ மீட்டர் பின்னால முன்னாலனு சுத்தி பாத்துட்டே ஒரு பிரவ்சிங் சென்டரும் இல்லை...(2008 லங்கோ) அடக் காலக் கொடுமையேன்னு வேற வழியில்லாம மணிய பாக்குறேன் பத்தே முக்கால்னு பல்லை இளிக்குது கடிகாரம்....

சரி எக்ஸ் சர்வீஸ்மேன் சைட்ல செம கூட்டமா இருக்கேனு சின்ன கடை ஒண்ணுல போயி கேட்டேன். அவரு படு பிசி டக்குனு ஒரு பார்ம என் மூஞ்சில தூக்கி அடிச்சு இதை பில் அப் பண்ணி கொடுங்க பாசுன்னு சொல்லிட்டு அவரு முன்னால இருந்த 75பேரையும் சமாளிக்கிறதுலயே இருந்தாரு. பில் அப் பண்ணி கொடுத்து அவரு அடிச்சு முடிச்சு அப்ளிகேசன் பார்ம என்கிட்ட கொடுத்தப்ப மணி 11:45. பார்ம அடிச்சுகிட்டு வெளில வர்றேன் இன்னொரு அண்ணாச்சி வந்தாப்ல கூடவே....

சார் தக்காலா? இப்போ போனியன்னா எப்புடி உள்ள போவீங்க...செம்ம கூட்டம் க்யூவில நிக்குறாய்க நீங்க ஒரு 200 ரூபாய் கொடுங்க உள்ள நேரா போயிடலாம்னு சொன்னாரு. ஏற்கனவே ஆன்லைன் பார்ம் பில் அப் பண்ண 300 கொடுத்த கடுப்புல அது எல்லாம் வேணாம் அண்ணே நான் பாத்துக்குறேன்னு...பாஸ்ப்போர்ட் ஆபிஸ் கிட்ட நின்ன க்யூவுல போயி நின்னேன். அட ஆண்டவா 3 கிலோ மீட்டருக்கு நிக்குறாய்ங்களே...எப்டி உள்ள போறதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப

முன்னால நிண்ட ஒருத்தரு.... சார் தக்கால் கியூ அங்கிட்டு இருக்கு பாருங்கனு கொஞ்சம் சின்ன சைஸ் க்யூவ காட்டவும் சந்தோசத்துல ஓடிப் போயி அங்க நின்னேன். இரும்பு கேட்ட பாதி திறந்து ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு கிட்டு இருந்த ஒரு காக்கி பேண்ட் வெள்ளை சட்டை, ஒரு மாதிரி ஜெமினி கணேசன் மீசை வச்சிருந்த சார் சொன்னாப்ல .." சார் நேர உள்ள கூட்டியாந்து ஆபிசர்கிட்ட விடுறேன் ஏன் சிரமப்படுறியன்னு" காதுக்குள்ள வந்து சொன்னாப்ல....

ஆத்தாடி மறுக்கா காந்தி போட்ட நோட்டு போகப் போகுதேன்னு இறுக்கமா பைய பிடிச்சுகிட்டு....இல்ல சார் இட்ஸ் ஓ.கேன்னு நான் சொன்னதை ஒரு கெட்ட வார்த்தையைப் கேட்டது போல கேட்டுகிட்டு...போயிட்டாப்ல ...! அதுக்கப்புறம் நான் உள்ல போற டெர்ம் வரும் போது கதவ ஒருக்கழிச்சுகிட்டு சிறுசா தொறந்து விட்டுபுட்டு......அட...போங்க வேகமானு அதட்டினதுக்கு கூட இதுதான் காரணாம் இருந்து இருக்குமோன்னு நான் மேல மாடி ரூம்ல போயி சேர்ல வெயிட் பண்ண சொல்ற வரைக்கும் யோசிச்சுட்டு இருந்தேன்...

நம்பர் சிஸ்டம் இல்லை ஆனா சீட் சிஸ்டம் இருந்துச்சு. வரிசைப்படி ஒவ்வொருத்தரா உள்ள ரூமுக்குள்ள இருந்த ஒரு மூணு ஆபிசர்கள் கிட்ட வரிசைப்படி போயி சந்திக்கணும்னு சொன்னாங்க. என்னோட டர்ன் வந்தப்ப எனக்கு கிடைச்ச ஆபிசர் ஒரு பெண்மணி. அம்மணி முன்னால போயி உட்காரதுக்கு முன்னால...குட் ஆஃப்டர் நூன் மேடம்னு நான் சொல்லி முடிக்கவும் அவுங்க என்ன ஒரு முறை முறைச்சுட்டு.......வெயிட் பண்ணுங்க சார்.....லஞ்ச் முடிச்சுட்டு வர்றோம்னு கெளம்பிட்டாங்க...சரியா மணி 1.00.

அந்த ரூம விட்டு வெளில வந்து பெரிய ஹால்ல நின்னுகிட்டு ஒரு ப்யூன் ஒருத்தர் கிட்ட கேட்டேன் உள்ள கேன்டீன் இருக்கா சார்னு...அவரு இருந்த பிசில வலது கை மூட்டால விலாவுல என்ன ஒரு இடி இடிச்சுட்டு வாசப்பக்கம் கைய காட்டிட்டு போயிட்டாரு! வாசப்பக்கம் போயி மறுபடியும் கீழ இறங்கி இரும்பு கேட் கிட்ட வந்து முன்னாடி என்கிட்ட வந்து சீக்கிரம் அனுப்பவான்னு கேட்டாரு பாத்தீங்களா ஒரு ஐயா அவர்கிட்ட கேட்டேன்....சார் வெளில போயி சாப்டுட்டு திரும்பி வரலாமன்னு...

ஓ..தாராளமா வரலாம்!!!! ஆனா வந்தா மறுபடி க்யூவுல நிக்கணும்னு ஒரு சிரிப்பு சிரிச்சு கிண்டல் பண்ற மாதிரி கனைச்சாரு.....! சரி விடு கிரகம்னு மறுபடியும் மாடிப் படி ஏறி நிதானமா வரும் போது படிக்கட்டுல ஒரு ஒரமா வெத்திலை எச்சிய துப்பி வச்சு இருக்காங்க பாருங்க...ஏன்யா சென்டரல் கவர்மெண்ட் ஒரு பாஸ்போர்ட் ஆபிஸ்ல இப்டி துப்பி வச்சி இருந்தீங்கன்னா..பப்ளிக் பஸ் ஸ்டாண்டல் எல்லாம் ஏன் துப்ப மாட்டீங்கனு நினைச்சுகிட்டு மேல ஏறும் போதே என் புத்திலதான் தப்பு இருக்குமோன்னு ஒரு டவுட் வேற....

அங்கிட்டும் இங்கிட்டும் பசியோட, அசதியோடு உள்ளயே அலைஞ்சு புட்டு...அரை மயக்கமாயிட்டேன்...! சரி கொஞ்சம் உஷார் பண்ணிக்கலாமேன்னு வாட்ச்ச திருப்பி மணி பாத்தேன் மணி 2:30. சரியா 1:00 மணிக்கு சாப்ட போன ஆபிசர்ஸ் 2 மணிக்கு வரணும்ல....அட வரலங்க....! ஒரு 2:45க்கு சிரிச்சு பேசிகிட்டு வந்தவுங்க உள்ள ஆள விடுன்னு சொல்லி உள்ள ஆளு போன பிறகும் மூணு டெஸ்க் முன்னாலயும் மூணு மனிசங்க நிக்கிறாய்ங்களேன்னு ஒரு சிரத்தை இல்லாம...பேசிக்கிட்டே இருந்தாங்க...

ஒரு வழியா என்ன உட்கார வச்சி எல்லா பேப்பரையும் செக் பணிட்டு... வேலிட் டாகுமெண்டையும் செக் பண்ணிட்டு... சொன்னிச்சு பாருங்க ஒரு விசயம் எனக்கு தலை சுத்திடுச்சு...அட ஆமாங்க 1998 ஆம் வருசம் எனக்கு பாஸ்போர்ட் வந்து பல தடவை வெளி நாடு போயிட்டு வந்தாச்சு 2008ல லீவுக்கு வந்த இடத்துல ரினிவ் பண்ணலாம்னு வந்தா 1998ல பாஸ்போர்ட் இஸ்யூ பண்ணினப்ப அவுங்களுகு போலிஸ் ரிப்போர்ட் வந்து கிடைக்கலயாம். அதனால நோட்டரி பப்ளிக் ஒருத்தர்கிட்ட போயி அஃபிடவேட் (ங்கொப்புறான சத்தியமா அந்த வார்த்தை அப்போதான் கேள்வி படுறேன்) வாங்கியாரணுமாம்....நான் அந்த ஊர்லதான் வசிக்கிறேன்னு.....

நான் கேட்டேன். ஏன் மேடம் போலிஸ் ரிப்போர்ட் வரலேன்னா அது உங்க பிரச்சினை. 10 வருசமா என்கொயரி பண்ணி ரிப்போர்ட் வரலேன்னா? நீங்கதான் அதை கன்சர்ன் டிப்பார்மெண்ட்கிட்ட ஃபாலோ பண்ணி வாங்கி இருக்கணும். ஏன் வாங்கல....? எத்தனை இமிக்ரேசன் ஸ்டாம்ப் இருக்கு என் பாஸ்போர்ட்ல....., நான் எவ்ளோ தடவை ட்ராவல் பண்ணி இருக்கேன் . இப்போ போலிஸ் ரிப்போர்ட் வராம எப்டி நீங்க பாஸ்போர்ட் இஸ்யூ பண்ணிணீங்க? சோ.. இட்ஸ் நாட் மை ப்ராப்ளம்னு சொன்னேன்....

இப்டி கேட்டவுடனே....ஹலோ மிஸ்டர் ...அதெல்லாம் எனக்குத் தெரியாது. போலிஸ் ரிப்போர்ட் வரலேன்னு ரிப்போர்ட் சொல்லுது. போயி வாங்கிட்டு அப்புறம் வாங்க....உங்க அப்ளிகேசன் ப்ராஸஸ் பண்றேன் இல்லன்னா முடியாதுன்னு....சொல்லிடிச்சு..! எவ்ளவோ எடுத்து சொல்லியும், 120 கிலோ மீட்டருக்கு அங்கிட்டு இருந்து வெள்ளன வந்தத சொல்லியும், அந்த ஏரியாவுல எனக்கு யாரையும் நோட்டரி பப்ளிக்க தெரியாதுன்னு சொன்னதையும் சீனியர் ஆஃபிசர மீட் பண்ண முடியுமான்னு நான் கேட்ட ரிக்வெஸ்ட்டையும்...

ஒரு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்ட ப்யூன வச்சி என்ன கழுத்த பிடிச்சு வெளில தள்ளாத குறையா வெளில தள்ளி அந்தம்மா நிராகரிச்சுடுச்சு....கூடவே அந்த ப்யூன் கிட்ட ஒரு லிஸ்ட் ஒண்ணு கொடுத்து அனுப்பிச்சுது...அதாகப்பட்டது அந்த லிஸ்ட்ல இருந்தவுக எல்லாம் அந்தா ஏரியாவுல போலியா அப்டிவிவேட் கொடுத்த நோட்டரி மாருங்களாம், அவுங்க கிட்ட வாங்கிட்டு வந்தா செல்லாதுன்னு சொல்லி கையில கொடுத்தாரு அந்த ப்யூன்....

பசி, மயக்கம், கடுப்பு, மரியாதை இல்லாம அந்தம்மா பேசுன பேச்சு எல்லாம் சேர விரக்தியோட மெதுவா கீழ இறங்கி வந்தேன்.....!!!! மறுபடி அதே டைப்பிங் சென்டர் போனேன். எனக்கு டைப் பண்ணி கொடுத்தவர் இன்னமும் பிசியாத்தான் இருந்தார். விபரம் சொன்னேன்...உடனே...ஏய் குமரேசான்னு கூப்பிட்டார். வந்தவன் கிட்ட...அப்டவேட் வாங்கிட்டு வந்து கொடுப்பா சாருக்குனு சொன்னாரு....

அந்த பையன்..உங்க ஊரு வீட்டு விலாசம் எழுதிக் கொடுங்க ஒரு 500ரூபாயாகும் ஓ.கேவான்னு கேட்டான். எனக்கு ஒண்ணுமே புரியல எதுக்கு அப்டிவேட் கொடுக்கணும்னே தெரியலையேன்னு குழம்பிகிட்டு இருந்த எனக்கு அந்த நேரத்துல வேலய முடிக்கணுமேன்னு....அவன் கிட்ட பேரம் பேசி 300 ரூபாய் கொடுத்தேன்....

அந்த தம்பி போக தயார் ஆகும் போது...தம்பி நோட்டரி பப்ளிக் பேரு லிஸ்ட்டுடு டு..ன்னு பேப்பரை காட்டினேன்...! அவன் சொன்னான் தெரியும் சார்...இவரு வேற ஆளு லிஸ்ட்ல இல்லாத ஆளுதான் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போனவன் 10 நிமிசத்துல திரும்பி வந்தான்....

ஸ்டாம்ப் பேப்பர்ல பக்காவா திருச்சில உட்கார்ந்து கிட்டு மதுக்கூர்ல இருக்க எனக்கு என்னிய பாக்காமலேயே ஜவாப்பு கொடுத்து இருந்தார் சார்வாள்.

அதுவரைக்கும் அந்த தெருக்கடையோர கல்லுல உட்கார்ந்து இருந்த நான் எழுந்து மறுபடி பாஸ்போர்ட் ஆபிசுக்கு போகணும்னு மணி பாத்தப்ப....மணி 6:15......

போய்ட்டு காலையில் வந்து கொடுங்க சார் இனிமே பாக்க மாட்டாங்கனு சொல்லிட்டு அடுத்த வேலைக்கு குமரேசன் தம்பி போய்ட்டான்...! வந்த வேலை முடியாதது மட்டும் இல்லாம ஏகப்பட்ட மன உளைச்சலோட சாப்ட கூட மனசு இல்லாம ஒரு டீய குடிச்சுட்டு....! கடையில தண்ணிய வாங்கி மூஞ்சிய கழுவிட்டு....தஞ்சாவூர் போற பஸ்ல ஏறி ஜன்னலோராமா உட்கார்ந்து கிட்டேன்.....

வண்டி போக போக சில்லுனு காத்து மூஞ்சிக்கு தெம்பா இருந்துச்சு....கூடவே சில கேள்விகளும் என்னை தொலைச்சு போட்டுச்சு....

1) ஒரு இடத்துக்கு போறதுக்கு முன்னால பிரிப்பேர் பண்ணிக்காம போனது என் தப்புதான் ஆனா....ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்து போற ஒரு பாஸ்போர்ட் ஆபிஸ் வாசல்ல ஏஜண்ட்கள் குமிஞ்சு கிடக்காங்களே..., கன்ன பின்னானு ஒரு காசு கேக்குறாங்களே..இதையெல்லாம் ஏன் அரசே பட்டதாரி இளைஞர்களை வச்சி செய்யக் கூடாது?

2) பாஸ்போர்ட் ஆபிச சுத்தி சுத்தி ஒரு பிரவுசிங் சென்டர் கூட இல்லாதது எதார்த்தமான ஒன்றா? அல்லது வேறு பின்ணனி உண்டா?

3) ஒவ்வொரு தடவையும் ஆன்லைன்ல போட்டு இருக்கோம், ஆன்லைன்ல போட்டு இருக்கோம்னு சொல்ற பாஸ்போர்ட் ஆஃபிசர்ஸ் வேலை செய்றது ரூரல் சைட்லனு கவர்மெண்டுக்கு வேணா தெரியாம இருக்கலாம்? ஆனா அங்க வேலை பாக்குற ஆபிசர்ஸ்க்குமா தெரியாது. முனியனும், குப்பனும், இராமசாமியும்........ஆன்லைன் பாத்துதான் அன்றாடத்த தொடங்குறாங்களா.....என்ன?

4) 1998ல கொடுத்த பாஸ்போர்ட்டுகு போலிஸ் ரிப்போர்ட் வரலன்னு சொல்லி என்ன விரட்டியடிச்ச அந்த அதிகாரி ஏன் சிடு சிடுன்னு எரிஞ்சு விழணும்? நம்ம ஊர்ல கஸ்டமர் சர்வீஸ்னா என்னனு தனியார் நிறுவனம் மட்டும்தான் படிக்கணும் நடக்கணுமா? அரசு அலுவலகங்களும் போலிஸ் ஸ்டேசனும் இதை பின் பற்றக் கூடாதா?

5) அவசரத்துக்கும் அலைக்கழிப்புக்கும் கால விரையத்துக்கும் பயந்துகிட்டுதான் நோட்டரி பப்ளிக்குக்கு நான் காசு கொடுத்து அந்த சர்டிபிகேட் வாங்கினேன். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் சூழலும் முறையற்ற அரசு இயந்திரங்களும்னு எடுத்தக்கலாமா? இல்லை இது முழுக்க முழுக்க என்னோட தப்பா?

கடைசியா.....

6) 10 வருசத்துக்கு முன்னால கொடுத்த பாஸ்போர்ட்டுக்கு, போலிஸ் ரிப்போர்ட் வரலன்னு சொல்லி என்ன்னை அதுக்கு பொறுப்பாக்கியது சரியா தப்பா?

இப்டி எல்லாம் நான் யோசிச்சுகிட்டே ஊர் வந்து சேந்துட்டேன்....! அதுக்கடுத்த நாள் நான் போய் அப்ளை பண்ணியது, அதுக்கப்புறம் பாஸ்போர்ட் வந்தது...இப்போ இது நடந்து 3 வருசம் ஆனது எல்லாம் இல்லை மேட்டர்....மேலே இருக்கும் 6 கேள்வியும்தான் மேட்டர். ஏன்னா இன்னும் இந்த கேள்விகள் என்னை தொடர்ந்து கிட்டேதான் இருக்கு....இன்னேலர்ந்து உங்களையும் தொடரட்டும்....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

தேவா. S


Comments

உண்மை தான். நீங்க கேட்ட அந்த ஆறு கேள்விகளும், விடை தெரியாத கேள்விகள் தான்.

ஆனா, நீங்க சொன்ன தீர்வு கேக்க நல்லாத்தான் இருக்கு, வேலை இல்லை இல்லைன்னு சொல்லிட்டு திரியுற இளைஞர்கள், இந்த மாதிரி வேலைகளை செய்து கொடுத்து, நியாயமான பணம் பெற்று கொள்ளலாம். அவர்களே ஒரு ப்ரௌசிங் சென்டர் வைப்பதற்கான வசதி இருந்தால் அதையும் கூட செய்யலாம்..!

நன்கு படித்து, இத்தனை வருடம் வெளிநாட்டில் இருந்து வரும் உங்களுக்கே......... இந்த நிலைமை என்றால் நம் நாட்டில் உள்ள சாதாரணப் பட்ட மக்கள் நிலமைய யோசிச்சு பாருங்க.

ஹம்ம்ம்ம்.. என்னிக்கு இதெல்லாம் சரியாகுமோ?

Thanks for sharing your thoughts. :)
வினோ said…
அண்ணா எல்லாம் காசு தான்... எத்தனை புதிய வழிமுறைகள் வந்தாலும், அங்கு காசு பார்க்க பல ஓட்டைகள் கண்டுபிடிக்கப் படும், அரசு அதற்கு துணை நிற்கும்...
இந்த தலைவலியே வேனாமுன்னு 120 Dhs + 4 போட்டோவை மட்டுமே குடுத்து இங்கேயே ரினுவல் பண்ணிடறேன் . இல்லாட்டி இதே டென்ஷனிலேயே லீவு போய்டும் .
இதை விட பல கேள்விகளை ஒவ்வொரு அரசு அலுவலகமும் தினமும் தந்துகிட்டுதாண்ணே இருக்கு..!! விடையே இல்லாத கேள்விகள்..!! :(
Unknown said…
ரஜினி ஒரு உண்மையான வீர உள்ளது. அவர் நோய் சண்டையிடும் மற்றும் அவரது சகாக்கள் இடிக்க தயாராக உள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த