ஒரு நதி நகர்கிறது
சலனங்களை எல்லாம் விழுங்கிவிட்டு...
இரைச்சலான நிசப்தத்தோடு....!
அவ்வப்போது கலைந்து போகும்
தவத்தில் யாரேனும் மானுடரின்
அத்துமீறல் இருக்கும்....
பல நேரம் கரையோர பறவைகளின்
மோன மொழியின் போதையில்
கிறங்கியே கிடக்கும்!
தன் சுயமே இல்லாமல்
வற்றிப் போகும் கோடையிலும் கூட
தடத்தினை நியாபகமாய்
விட்டுச் செல்லும்...!
நிலவின் கிரகணங்களில்
ஜொலிக்கும் அலங்காரமாகட்டும்
அமாவசை இரவுகளின்
அடர்த்தியான அமைதியாகட்டும்
சப்தமான ஆழங்களை
தன்னுள் தேக்கி...
சலனமற்றுதான் நகர்கிறது
இந்த நதி!!!!
தேவா. S
Comments
இரைச்சலான நிசப்தத்தோடு....!//
...இரைச்சலான நிசப்தம், முரணான அழகிய வரி. ரசித்தேன். நன்றி :)
தன்னுள் தேக்கி...
சலனமற்றுதான் நகர்கிறது
இந்த நதி!!!!//
ஆக்ரோசமான அழகான நதி ! :-)
அருமை !!!