Skip to main content

போதி தர்மன் பேசுகிறேன்...!


























நான் போதி தர்மன்....! உங்களோடு எதுவும் நான் பேசவில்லை...! என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாய் நான் பிறந்திருந்தேன். என்னை ஜனிப்பித்து வெளிக் கொணர்ந்த பூமியில் படர்ந்து கிடந்த போதி மரத்தின் நிழலிலும், பரவிக் கிடந்த காற்றிலுமிருந்து என்னுள் புகுந்து கொண்ட வழிமுறைதான் பெளத்தம். பெரும்பாலும் நான் பேசுவது இல்லை. இப்போது கூட என்னுள்ளேயே நான் ஸ்பூரித்துக் கிடக்கும் என் அந்திமத்தில் நானே நானாய் என் எண்ணங்களூடேதான் நகர்கிறேன்.

இல்லாமல் சுழலும், எல்லாமாயிருக்கும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பூமிப் பந்தின் மூலமும் சரி, அதைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் பேரண்டமும் சரி கருத்துக்கள் அற்றது. விளக்க வேண்டிய அவசியங்களுமற்றது. எல்லாம் இயல்பாயிருக்க மனிதன் மனத்தோடு பிறந்தான். மனம் மதத்தைப் படைத்தது. மதம் கடவுள்களைப் படைத்தது. கடவுளர் இல்லை என்று சொன்ன இடத்தில் புத்தன் பிறந்தான். புத்தனால் இயல்பு பிறந்தது. வாழ்க்கையின் இயங்கு தன்மை விளங்கியது.

இயல்பில் இரு. தேவையானதை அறி. அறிந்ததை தெளி. தெளிந்ததைப் புரி. நகர்ந்து கொண்டே இரு. நகர்கிறேன் என்று எண்ணாதே. வந்ததும், இருப்பதும், செல்வதும் இயக்கத்தின் நிகழ்வு. வார்த்தைகளுக்குள் உன் அனுபவங்களைக் கொண்டு வராதே. உன் அனுபவம் உன்னுடையது. அதை விவரித்து கூறுகையில் அது வேறு செய்தியைத்தான் எப்போதும் சொல்ளும்.

நான் புத்தம் என்ற மதத்தையோ கோட்பாட்டையோ வெறுமனே ஏற்றவன் அல்ல. புத்தரை விளங்கியவன். புத்தரின் அமைதியை என்னுள் கடந்து போக அனுமதித்தவன். வாழ்க்கையின் ஓட்டத்தில் தெளிவுகளைக் காலங்கள் தோறும் புத்தர்கள் உணர்த்திதான் சென்றிருக்கிறார்கள். யாரும் எதையும் நிறுவ இங்கு வரவில்லை. நிறுவியவர்கள் புத்தர்களும் அல்ல...

நான் அரசரின் புதல்வன். செல்வம் நிறைந்த சீமான் என்று என் தற்கால இருப்பு நிலை கொடுத்திருப்பது ஒரு போலி நிகழ்வு. நிஜ நிகழ்விற்காகத்தான் நான் மெளனித்து இருந்தேன். என் மெளனத்தை விளங்கிக் கொள்ள புத்தனை விளங்கினேன் என்று கூறியவர்களாலேயே இயலவில்லை.

எனக்குள் ஏதேதோ அற்புத நடனங்கள் நிகழ்ந்தன. என் ஜீவ இருப்பும், பிரபஞ்சத்தின் மூல இருப்பும் அசையாமல் எல்லாவற்றுள்ளும் விரிந்து கிடக்கையில் என்னை ஏதேனும் சொல்லச் சொல்லி என் கூட இருந்த கூட்டங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டே இருந்தன.

நான் பேசுவேன். உங்களால் கேட்க முடியாது. நான் பாடுவேன் என் பாடல் உங்களுக்குப் புரியாது. நான் உங்களிடம் ஏதேதோ கூறுவேன் ஆனால் அதனால் உங்களுக்கு எந்தப் பலனும் இராது என்பதால்தான், நான் எதுவுமே கூற விரும்பியது இல்லை.

என்னை காண வரும் அத்தனை பேரும் என்னை ஒரு பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாக காண வருவார்கள்..இல்லையேல்...ஒரு பெளத்த குருவாக காணவருவார்கள்....இல்லையேல் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்கும் குருவைக் காண வருவது போல வருவார்கள்...

நான் ஒரு வெற்றுப் பாத்திரம். என்னிடம் ஒன்றுமில்லை என்பதை உணர்தலே அவர்களின் தெளிவின் பிறப்பிடம். என் ஆழமான புரிதலை அவர்களுக்குள் நிறைக்க முடியாமல் பல நேரம் போராடி போராடி அந்த போரட்டத்தில் என் அறியாமையை விளங்கி மீண்டும் சலனமற்று போயிருந்திருக்கிறேன்.

காலி பாத்திரங்கள் நிரப்பப்படலாம், ஆனால் என்னைத் தேடி வருபவர்கள் எல்லோருமே நிரம்பிக் கிடக்கிறார்கள். வெள்ளைப் பக்கமாய் நான் வருகிறேன் என்று சிலர் வந்தார்கள். ஏதோ சொல்லி அவர்களுக்குள் நான் எழுதிவிடுவேன் என்றும்....மற்றவகளுக்கு ஏதேதோ கூறி நான் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணுவேன் என்றும் நம்புகிறார்கள்...

மாற்றங்களை மனிதர்கள் விரும்பும் வரை....எதையோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கும் வரை.... என்னிடம் இருந்து ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கப்போவது இல்லை. இந்தக் கணத்தில் எல்லாம் நிரம்பிக் கிடக்கிறது....இந்த தருணத்தில் சந்திரன் ஒளி வீசுகிறான்....இந்தக் கணத்தில் பூக்கள் அழகாய் மலர்ந்து இருக்கின்றன.....இந்தக் கணத்தில்....யாரோ எங்கோ ஒரு தாலட்டுப் பாடுகிறார்கள்.....இந்தக் கணத்தில் ஒரு மெல்லிய காற்று வீசுகிறது....

இந்தக் கணத்தின் சக்கரவர்த்தி நான்....என்னிடம் எதிர்காலத்திற்கு ஏதோ வேண்டும் என்று வரும் பைத்தியக்காரர்களை நான் என்ன சொல்லி மாற்ற முடியும்....?

நான் சலித்து எடுத்த தங்கம் அல்ல.... ! நான் தங்கத்தின் மூலமான இயல்புநிலையிருக்கும் ஒரு வஸ்து....என்னிடம் மிகுந்திருப்பது இயற்கையின் இயல்புகள்...! அவற்றை ரசிப்பது கடினமதான் ஆனால் அதுதான் மூல உண்மை என்று உணர்கையில் மட்டுமே புத்தன் உங்களுக்குள் பிறப்பான்....

நான் போதி தர்மன்.....! உங்களோடு நான் பேசவில்லை...என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....


(இன்னமும் பேசுவார்....)


தேவா. S

Comments

//(இன்னமும் பேசுவார்....)//


போதிதர்மர் 7ஆம் அறிவு படம் பார்த்து விட்டாரா இன்னமும் இல்லையா...??

தியேட்டரில் போய் பார்த்தாரா இல்லை net-ல் download செய்து பார்த்தாரா :))
dheva said…
போதி தர்மர் ..இப்போது கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்... கிருஷ்ணா அண்ணன் பெயரில்...!

நன்றிகள் அண்ணா...!!!!
////போதி தர்மர் ..இப்போது கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்... கிருஷ்ணா அண்ணன் பெயரில்...!////

அதை நான் அறிவேன் தம்பி :)

இந்த போதிதர்மர் அறிய விரும்பி கேள்வி கேட்டது .....தேவா தம்பியாக உள்ள போதிதர்மர் படம் பார்த்துவிட்டார என்பதை தான் ?? :))
dheva said…
கிருஷ்ணா @

படம் பார்த்துட்டேன் அண்ணா...நெட்லதான் பார்த்தேன்...!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த