Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 5!



ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்..

நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...!

ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது.

முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள் வந்து விட்ட பின்னரும் பூமியில் வாழும் ஒரு நிலை கொண்டு இருக்கும் ஆத்மார்த்த கலைஞர்களை பெரும்பாலும் எல்லோரும் சரியாக அடையாளம்  கண்டு கொள்வதில்லை. அப்படியே மிகைப்பட்ட பேர்கள் கண்டு கொண்டு விட்டாலும் அது கலைஞனின் உருவத்தையோ, பின் புலத்தையோ, அவனை ரசிப்பதால் மிகைப்பட்டபேர் தன்னை மதிப்பரென்றோ, அல்லது அவனால் தமக்கேதேனும் ஆதாயம் கிட்டாதா என்றும் ஏதோ ஒரு சுய நலப் போக்கில் அமைந்து விடுகிறது.

ஒரு சரியான கலைஞன் மேற் சொன்ன எல்லாம் அறிந்து, பெரும்பாலும் இவர்களை ஏதோ ஒரு காரணத்தை காட்டி புறம் தள்ளுகிறான், ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு ஜனித்த மூலத்தை கண்டு ரசிக்கும் ஒரு ரசிகனையோ அல்லது ரசிகையையோ....

அவன் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடியாது. ஏனென்றால் அவனிடமிருந்து வெளிப்படும் இசையை அவன் எங்கிருந்து எடுத்தானோ அந்த இடத்தை கண்டு ...இங்கே தானே??? இப்படித்தானே என்று ஆச்சர்யமாய் கண் விரிக்கும் போது இவன் தன்னின் படைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும், மேலும் தன்னை தனது கலையின் மூலம் அற்புத படைப்புகளாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப் பட்ட இசைக்கலைஞன் நான். எனது வாழ்க்கையில் நுழைந்த சிந்து....இப்படி, அப்படி என்னை ரசித்தவள்,  என் புறச்சூழலை காரணம் காட்டி லோகாதாய மாயங்களுக்கு பயந்து என்னை விட்டுப் போய் விட்டாளென்றால்....... என் கலை எப்படி வாழும்...? என்னை உற்று நோக்கி சீராட்டும் ஒரு விமர்ச்சிக்குமொரு பொக்கிஷம் இல்லையெனில்....என்னவாகும்....?

இந்த மாதிரி பாடல்தான் ஜனிக்கும்....!!!! 

காலத்தால் அழியாத ஓவியம் செய்த பிரம்மா கே. பாலச்சந்தர் சார்......ஜேசுதாஸ் சார், இசை தெய்வம் இளையராஜா சார் மற்றும் இதில் நடித்திருக்கும் சிவகுமார் சார்....கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டிய ஒரு இசை படைப்பு..!!!! நான் என்ன சொல்லி விடமுடியும்...

எறும்பு வியந்தாலும்...
இமயம் இமயம்தானே...!

இனிமையான இசையால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அற்புத அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.



தேவா. S


Comments

அருமையான பாடலை விளக்கி கவிதை நடையில் நீங்கள் சொன்ன விதம் அருமை.

இளையராஜா அவர்களின் பாடல்கள்தான் நான் விரும்பிக் கேட்பவை.

அருமையான பாடல் பகிர்வு.
ஹேமா said…
என்மே மறக்கமுடியாத பாடலோடு உங்கள் வர்ணனையும் களை கட்டி நிற்கிறது பதிவில் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல