Skip to main content

சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!



எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...?

யோசித்தபடியே...

பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்.  இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்களுக்குள் பரவி இருந்த தீ எரித்துக் கொண்டிருக்க..காதலை இங்கே வகைப்படுத்தத் தெரியாத ஒரு நிதானம் எங்கள் நிர்வாணத்தில் ஒளிந்து கொண்டிருந்தது.

பனியனைக் கழட்டுடா...என்று "ட்டுடா" விற்கு அவள் கொடுத்த அழுத்ததிற்கு பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்.....

முழு நிர்வாணம் என்பது கருத்துக்கள் அற்ற நிலை. நிறமற்ற வர்ணக் கூட்டு அது. புத்திகளை எரித்து விட்டு ஞானக்குதிரையிலேறி ஐன்ஸ்டீனின் சார்புக்கொள்கையை மெய்ப்பிக்கும் உலகுக்குள் சப்தமற்ற பெரு இரைச்சலோடு நுழைவது. நிர்வாணத்தின் புனிதத்தை எடுத்துச் சொல்லத்தான் உடையற்று இருப்பதை நிர்வாணம் என்று ஆன்மீகம் சொல்லியிருக்குமோ..?

உடையற்று இருப்பதை அம்மணம் என்றும் சொல்லலாம். அம்மணம் என்று சொல்லும் போது மனதில் தோன்றும் ஒரு வக்ரம் நிர்வாணம் என்று சொல்லும் போது தோன்றுவதில்லை. எல்லா வார்த்தைகளுக்குமான காட்சி விரிவாக்கங்கள் நமது மூளையின் சேமிப்பு பகுதியில் நமது புரிதலுக்கு ஏற்ப சேமிக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகளில், நாம் காணும் காட்சிகளில் பெரும்பாலும் தவறு இருப்பது இல்லை, அதை ஒப்பீடு செய்யும் நமது புரிதலே இது தவறு இது சரி என்று நமக்குச் சொல்கிறது. நிர்வாணம் என்பது சுதந்திரம். எதையும் கருத்தில் கொள்ளாத நிலை. மனம் நின்று போக செயல் மட்டுமே நிகழும் ஒரு புனிதம். காமத்தில் இது எளிதாய் பிடிபடும். காமம் கடந்தும் நிர்வாணமாய் இருக்க முடியும். உடை இல்லாத நிர்வாணம் என்பது ஒரு சூட்சும குறியீடு. ஆடை அணிகலன்களோடு, சக்கரவர்த்தியாய் ஒரு தேசத்தை கூடா நிர்வாண நிலையில் ஆட்சி செய்ய முடியும்.

நிர்வாணம் என்பது மனமற்ற இயக்கம். 

 கலவியின் போது உடையில்லாத உடல்கள் நிர்வாணம் என்றே அறியப்பட வேண்டும்.  ஆணும் பெண்ணும் உடையற்று உடலைப் பார்க்கும் போது..புத்திக்குள் பற்ற வைக்கப்படும் நெருப்பு பிரபஞ்சத்தின் ஆதியில் சலமனற்று இருந்த சூன்யத்தில் ஏற்பட்ட முதல் அசைவினை ஒத்தது. முதல் சலனம்.

இயக்க முரணில் ஒன்று இந்த திருமண பந்தம்....சரியா...?

பத்மா என் தோளில் கை போட்டு இறுக்கியபடியே என்னை உலுக்கினாள்...எனக்குள் சமூகம் விதைத்திருந்த குற்ற உணர்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது..? நான் மெளனமாயிருந்தேன்...!

என்ன சுரேஷ்.. பேசாம இருக்க...?

அவள் முன் நகர்ந்து என்னை அழுத்தி உதடு கடித்துக் கேட்க....நாம தப்பு செய்றோமா..? பத்மா... சாரி சாரி நான்....தப்பு செய்றேனா...? தடுமாற்றமாய் புரண்டு படுத்து.....விட்டத்தைப் பார்த்தபடி பெருமூச்சு விட்ட போது என் மீது ஏறிப் படுத்துக் கொண்டாள் பத்மா...

" எங்கே உங்களின் அளவுகோல்கள்
சரியாய்ப் பிரிக்கின்றன...
காதலையும் காமத்தையும்...?
கோடரியின் முனையில் பட்டுத் தெறிக்கும்
மரமொன்று விறகென்று
எரியூட்டப்பட்ட பின்பு...
மரமுமில்லை..விறகுமில்லை...
சாம்பல் அல்லவோ மிச்சம்...
அங்கே...."

நீதானே கவிதை எழுதினாய்....? என்று என் நெஞ்சினில் தன் விரல்களால் எழுதிக் கொண்டே கேட்டது பத்மா. திருமணத்திற்கு முன் காமம் தவறென்று யார் சொன்னது....? திருமணம் என்பதே நம்பிக்கை இல்லாதவர்களின் ஏற்பாடுதானே..?

" கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலை மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....

சொல்லி விட்டு சப்தமாய் சிரித்த பத்மாவைப் பற்றி அதிகம் நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் உங்களுக்குள் குடித்தனம் நடத்தும் கலாச்சார குட்டிச்சாத்தான்கள்.. கடவுள் வேசமிட்டுக் கொண்டு அவளின் குரல்வளையை நோக்கி வேகமாய் பாய்ந்து விடக்கூடும்....! நீங்கள் நியாங்களைப் பேசினால் அவள் இயல்புகளைப் பேசுவாள், நீங்கள் ஒழுக்கத்தைப் பேசினால் அவள் இயக்கத்தைப் பற்றி பேசுவாள். நீங்கள் சந்தோசத்துக்கு எல்லைகள் உண்டு என்றால் அவள் ஆர்க்கிமிடிஸாய் யுரேகாவின் உச்சம் தெருவில் அம்மண ஓட்டமானது தவறா என்று கேட்பாள். சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் கூறுவதை நீங்களும் நானும் மறுக்கவே முடியாது. அதனால் அவளை கேள்விகள் கேட்டு அவளின் பதிலில் உங்களின் சுயத்தைப்பார்த்து நீங்கள் மூர்ச்சையாகாதீர்கள்.

திருமணம் என்பது 1000 பேரை அழைத்து எனக்கு நீ... உனக்கு நான் என்று உறுதி செய்து கொண்டு.. எல்லோர் முன்னாலும் இவன் என் கணவன், நான் இவனது மனைவி என்று கூவிக் கூவிச் சொல்லி விட்டு....நேரம், காலம் பார்த்து உடையவிழ்ப்பது...?

என்ன சரியா கவிஞரே....? பத்மா என்னை கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது....

ஏண்டி லூசு...உன் அளவிற்கு எனக்கு எழுத வராது என்பதால் இப்படி ஒரு வஞ்சப்புகழ்ச்சியா..?

" கணிணி தட்டும்
உன் இயந்திர விரல்களில்
இருந்து
எப்படி பிறக்கிறது
இரத்தமும் சதையுமாய்
இத்தனை கவிதைகள்...? "

நான் ஆச்சர்யமாய் அவளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்...! 

வலிகளோடு கூடி
வலிகளைச் சுமந்து
வலிகளோடு பிறக்கும்
வலிகள்தானே படைப்புகளென்பது....

என்று அவள் கூறிய போது அவளின் வலிகளின் உச்சத்திற்கு சாட்சியாய் வெளி வந்துள்ள அவளின் புத்தகங்கள் என் முன் காட்சிப்படுத்தப்பட்டு போகும். என்னால கல்யாணம் இப்போ பண்ணிக்க முடியாது பத்மா....நான் வாழ்க்கையில செட்டில் ஆகணுமே....? நீ கை நிறைய சம்பாரிக்கிறன்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு  உன் காசுல எப்டி பத்மா நான் உக்காந்து சாப்பிடுறது....? தப்பு இல்லை...?போனவாரம் கூட ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி இருக்கேன்...கண்டிப்பா எனக்கு ஒரு பிரேக் கிடைக்கும்...அப்புறமா...

என்று நான் சொல்லி ஜவ் மிட்டாயாய்  இழுத்துக் கொண்டிருக்கும் இந்த ஐந்து வருடத்தில்...கதை கேட்ட ஒருத்தன் கூட என்னை படமெடுக்க அழைக்கவில்லை. இந்த சமூகத்தில் திறமையாளர்கள் எல்லோருக்கும் எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்று தெரிவதில்லை. என் திறமை என்னை மேலேற்றும்...என்ற இறுமாப்பில் அவர்களின் முதுகுத் தண்டு நிமிர்ந்தே நிற்கிறது எப்போதும்.கூழைக்கும்பிடுகளும், வணிக ரீதியான உடன்பாடுகளுக்குள்ளும் அவர்கள் நுழைவதே....இல்லை...

கழுத்தில் கடித்தவளை இறுக்க அணைத்தேன்....விதி விலக்குகளை எல்லாம் கொண்ட வாழ்க்கையில் விட்டில் பூச்சியின் சிறு நெருப்பாய் காமம் கனன்று கொண்டிருக்க... அவளை இழுத்து உதட்டோடு உதடு பதித்தேன். சூழ்நிலைகளே இங்கே எல்லாவற்றுக்கும் காரணமாக,  விதிமுறைகள் எல்லாம் வெற்று மாயைகளாக கரைந்து போய்விடுகின்றன...

" என் ப்ரியங்களை எல்லாம்
இந்த வசந்தகாலம்தான்......
சுமந்து கொண்டு திரிகிறது....
அடர் வனத்தில் 
என் அன்பைத்தான்
எப்போதும்... 
கூவிக் கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைக் குயில்..." 

பத்மாவுக்குள் நானும் எனக்குள் பத்மாவும் கரைந்து கொண்டிருக்கையில்..எங்களின் நீண்ட பெரு மூச்சுக்கள்  அங்கே வேதம் ஓதிக் கொண்டிருந்தன. அக்னி சாட்சியாவது ஏன் என்பதற்கொரு விளக்கத்தை ஏந்திக் கொண்டு, மஞ்சள் கயிறுகளில் முடிச்சுடும் வைபவங்களில்தான் ஒளிந்திருக்கிறது புனிதம் என்று ஓதிய சாத்தானின் கொம்புகளை முறித்து கையில் வைத்துக் கொண்டு எங்களுக்காய் காவல் காத்துக் கொண்டிருக்கின்ற கடவுளை இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் எட்டிப் பிடிக்கக் கூடும்....

வியர்வையில் உடல் நனைய, உள்ளுக்குள் எரியும் அக்னி உஷ்ண மூச்சுக்காற்றாய்.... திக்குகள் கடந்து பயணித்துக் கொண்டிருந்த பெரும் பிரபஞ்ச வெளியில்....யாரோ ஒருவனின் ஈமச்சடங்கில் உடலில் பற்றிய நெருப்பு பொசுங்கலாய் பயணித்து அப்போதுதான் ஜனித்து வெளித் தள்ளப்பட்ட ஒரு சிசுவின் நாசியில் முதற்சுவாசமாய் ஏற....வீறிட்டு அழுத குழந்தை ஆணா பெண்ணா என்று பார்க்கிறாள் தாதியொருத்தி.....

பிரளயத்தின் உச்சத்தில் எல்லாம் ஒடுங்கும்; எல்லாம் அடங்கும்; பிரளயம் வெறி கொண்ட குதிரையாய் திமிறிக் கொண்டிருந்தது. சப்தநாடிகளும் நின்று போக அலறலாய் ஓடும் குதிரைகளின் கனைத்தல்  இன்னும் அதிகமாக,  உக்கிரமாய் அவற்றின் வயிறு உதைத்து பிடறி தடவி, வேகத்தைக் கூட்ட சீறிப்பாயும் குதிரையின் பாய்ச்சல் போதாதென்று அதன் கழுத்தைக் கடித்து....முதுகில் அறைந்து விரட்ட. விரட்ட...

தறிகெட்டோடும் குதிரையின் கடிவாளங்கள் இறுக்கி இறுக்கி அறுபட்டே போகும் நொடியில்...பெரும் கனைத்தலோடு....பெரும் பள்ளத்தாக்கில் சீற்றமாய் பாய.....

எல்லா சப்தங்களும் அடங்க,  யாருமற்ற மயானத்தில் படிந்து கிடக்கும் சூன்ய அமைதியில்...எல்லாம் உடைந்து விழ.....

உக்கிரகாமம் உடைந்து, நொறுங்கி வடிவிழந்து.....மொழியிழந்து... பொருள் இழந்து.... உருவமற்று.....

அருவத்தில் விசிறியடிக்கப்பட்ட....
வர்ணக் கலவையிலிருந்து
உயிர்  பெற்றுக் கொள்ளும்
ஓவியத்திலிருந்து 
மீட்டப்படும் யாழிலிருந்து
பிறக்கிறது 
ஒரு...ஜீவ இசை...!

அந்த ரீங்கார இசையில் நான்  அவளாயிருந்த நேரம் எவ்வளவு....? என்று கணக்கிடமுடியாமல்....நானும் பத்மாவும் தற்காலிகமாய் செத்துப் போயிருந்தோம்....!

என் வீட்டுப் படுக்கையறையும், நானும் பத்மாவும்....கலைந்து கிடந்தோம்;  செயற்கையின் முகத்திரைகள் கிழிந்து தொங்க எதார்த்தம் அங்கே ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தது. 


திருத்தம் அழகென்று
யார் சொன்னது...?
ஒழுங்குகள் என்னும்
ஒப்பனையிட்டுக் கொள்ளும்
பொய்கள்....
கலையும் போது
எட்டிப் பார்க்கும்..
ஒழுங்கற்றதில் இருக்கிறது...
எல்லோரும் தேடும் கடவுளின்
இயல்புகள்...!

காதுக்குள் கிசு கிசுத்தபடி...கலைந்து இருந்த தலை முடியை இறுக அள்ளிக் கட்டிக் கொண்டே என் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள்....

கல்யாணம் முடிஞ்சுடுச்சு....சீஃப்....கெட் அப்....!!!!!!

என்னை உலுக்கினாள்...!

கண் விழித்து அவளைப் பார்த்தேன்....

எழுந்து ப்ளேயரை தட்டி விட்டு...

"நெஞ்சு பொறு..., கொஞ்சமிரு......
தாவணி விசிறிகள் வீசுகிறேன்...............
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.............."

இசையை அறைக்குள் வழிய விட்டு விட்டு... உடை மாற்றியபடியே, கிச்சனுக்குள் சென்று நான்கு நிமிடத்தில் திரும்பி வந்தாள்...

இரண்டு கையிலும் சூடாய் காஃபி.... !!!! எழுந்து பெட்சீட்டால் சுற்றிக் கொண்டு  ஜன்னலோரமாய் இருந்த டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தேன்....எதிரே...பத்மா.....

சூடாய் காஃபியை உறிஞ்சிய போது அவளின் உதடுகள் என் நினைவுக்கு வந்தது....

"டேய் இன்னும் பத்து வருசம்னாலும் உனக்காக காத்து இருப்பேன்டா...  கல்யாணம்ன்றது வெறும் சடங்கு... பேருக்கு கல்யாணம் பண்ணிட்டு.... மனசுக்குள்ள ஆயிரம் பேரை நினைச்சுக்கிட்டு இருக்கறதுதான் கற்புன்னு இந்த சமூகம் சொன்னிச்சுனா....நான் கற்புக்கரசி இல்லப்பா..., அதுக்கு கல்யாணம் பண்ணிக்காமலேயே தாலின்னு ஒண்ணு கட்டிக்காமலேயே எனக்கு பிடிச்ச ஒண்ணோட இருந்துட்டு செத்துப் போக நான் ரெடி...." 

அவள் பேசி கொண்டிருந்தாள்...

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!

நான் பாரதியை புத்திக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்....!


தேவா. S



Comments

Unknown said…
மிக அருமையான பதிவு தேவா.. வாழ்த்துக்கள்...
அவரவர் வசதிக்கு தான் இந்த சாத்திரங்கள்.. சம்பரதாயம் எல்லாம்... உண்மையான அன்புக்கு எதுவும் தேவை இல்லை..
Ungalranga said…
nirvanathin aadaigal...!!
//சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் கூறுவதை நீங்களும் நானும் மறுக்கவே முடியாது.// நிச்சயமாக ....
எப்டிங்க இப்டி எழுதுறிங்க? ... சான்சே இல்ல. வரிக்கு வரி விசயம் பொதிஞ்சு இருக்கு .
வரிகள் கவிதையாய் குத்தி கிழித்து விட்டு அதில் மெல்லிய இதழ்கள் கொண்டு உத்தடம் கொடுக்கும் ஒரு கலப்பு உணர்வுகளை உணர முடிந்தது ...படிக்கும் போதே தன்னை சமூகத்தை சூழலை என்று அனைத்தையும் நம்மோடு அல்லது நம்மை அதனோடு ஒப்பிட்டு பார்க்கும் ஒரு அபார உணர்வை கொடுக்கும் அற்புத எழுத்து தேவா ............உங்கள் எழுத்துக்குள் நுழைந்தபின் வெளிவருவது சுலபமாய் இல்லை மனதுக்குள் நுழைந்து ரீங்காரம் இடும் வண்டுபோல சதா சப்தமிடுகிறது .........நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த