Skip to main content

கணக்குல புலி...!


கணக்குன்னாலே நமக்கு ஏழாம் பொருத்தம். தர்க்க ரீதியா ஏன் எதுக்குன்னு விளக்கம் கொடுக்க முடியாத எந்த விசயமா இருந்தாலும் என் மூளைக்குள்ள அவ்ளோ சீக்கிரம் ஏறாது. ட்ரிக்காணாமேட்ரியும், அல்ஜிப்ராவும், தேற்றமும், மறுதலையும் மண்ணாங்கட்டியையும் கண்டாலே எனக்கு எப்பவுமே அலர்ஜி. இந்த லெட்சணத்துல ப்ளஸ் ஒன் படிக்கும் போதே ப்ளஸ் டூவுக்கு ட்யூசன் வேற. க்ளாஸ்ல எக்ஸ்ப்ரஸ்  வேகத்துல பாடம் நடத்துறப்ப நம்பியார், பி.எஸ். வீரப்பா கணக்கா மிரட்டுற வாத்தியாருங்க எல்லாம் இன்டிவிஜுவலா ட்யூசன் போறப்ப அவுங்க ட்யூசன் க்ளாஸ்ல எம்.ஜி.ஆரா மாறி "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."ன்ற ரேஞ்ச்சுக்கு கொஞ்சிக் குலாவுவாங்க. மாசக்கடைசியில ட்யூசன் பீஸ் லேட்டாயிடுச்சுன்னா புருசன் மேல கோபமா இருக்குற பொண்டாட்டி மாதிரி மூஞ்ச தூக்கியும் வச்சுக்கிடுவாங்க....!

விஜயகுமார் சார்கிட்டதான் நான் கணக்கு ட்யூசன் போனேன். பிசாசு எங்க இருந்தாலும் அது பிசாசுதானே...? அது க்ளாஸ் ரூம்ல மட்டும்தான் பிசாசா என்ன? எனக்கு ட்யூசன்லயும் கணக்கு பிசாசாதான் தெரிஞ்சுது. இந்தக் கொடுமையில வீட்ல வேற டாக்டர் ஆகலேன்னா கூட பரவாயில்லை எப்டியாச்சும் இன்ஜினியர் ஆகிடுவீல்ல..????!!!!!! அதுவும் கூட ஆகலேன்னா நீ எதுக்கும் லாயக்கு இல்லேன்னு ஒரு இக்கு வச்சே பேசிட்டு இருப்பாங்க. நானும் காலையில அஞ்சரை மணிக்கு  SPT பஸ்ஸ பிடிச்சு பட்டுக்கோட்டை போயி ஆறரை டூ ஏழரை பிஸிக்ஸ்க்கும், ஏழரை பிடிச்ச கணக்குக்கு ஏழரை டூ எட்டரைக்கும் ஓடி முடிச்சுட்டு அப்புறம் லபோ திபோன்னு ஸ்கூல்குள்ள போவேன். சாயந்திரம் நாலரை டூ அஞ்சரை கெமிஸ்ட்ரி, அஞ்சரை டூ ஆறரை பயலாஜி ட்யூசன். காலையில வெள்ளன எழுந்திரிச்சு ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடிட்டு க்ளாஸ்ல போய் உக்காந்து எங்க பாடம் கவனிக்கிறது. கிளாஸ் முழுக்க நல்லா படிக்கிற பசங்க ஒரு 10 பேரும் நல்லா படிக்கிற மாதிரி நடிக்கிற என்னை மாதிரி மிச்சப் பேரும் இருப்போம். எல்லோருக்குமே  ஒரே டாக்டர், இன்ஜினியர் கனவுதான்.

பப்ளிக் பரீட்சை அன்னிக்கு முதல் நாள் என்னோட எக்ஸாம் ஹாலுக்குள்ள நுழைஞ்சப்பவே என்னோட இன்ஜினியர் கனவு தடதடன்னு ஒடைஞ்சு விழுந்து மண்ணோடு மண்ணாகி சாம்பலாப் போச்சு. பின்ன என்னா சார்? எக்ஸாம் ஹாலுக்குள்ள என்ட்டர் ஆகும் மெயின் டோர் கடந்து உள்ள போனா டோர் ஓரமா முன்னாடி க்ளாஸ் போர்ட ஒட்டின டெஸ்க் என்னோடது. எனக்கு முன்னாடி சுவர்தான். எனக்குப் பின்னால பாதை அதுக்கப்புறம் வேற ஒரு கண்டத்துல உட்காந்து இருக்க மாதிரி அடுத்த பையன்.  எனக்குன்னே போட்டு வச்சமாதிரி இருந்த அந்த டெஸ்க் மேலதான் என் விதி டிஸ்கோ ஆடிட்டு இருந்துச்சு. சரி கருமம் தொலையிது சைட்ல எவனாச்சும் உருப்படியான ஆளு இருந்தா பாத்து எழுதியாச்சும் கட் ஆஃப் மார்க்காவது எடுத்து செல்ஃப் பினான்ஸ் காலேஜ்ல பி.இ சேந்துடலாம்னு லெஃப்ட்ல திரும்பினா அங்க என்ன பாத்து ஈ..ஈ..ஈ..ன்னு இளிச்சுக்கிட்டு இந்திரஜித். அடக் கருமாந்திரம் புடிச்சவனே உன்னிய ஏன்டா என் கூட போட்டாய்ங்க உன் தலையில ஒரு ரூபா வச்சு பட்டுக்கோட்டை மணிக்கூண்டுல ஏலத்துக்கு விட்டா கால்ரூபாய்க்குதானடா உன்னைய கேப்பாய்ங்க... உன்னிய வச்சு நான் என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டே சோகமா இந்திரஜித்த பாத்தேன்.

”ஆளு....கொஞ்சம் டவுட் கேட்டா எனக்கு காட்டு ஆளு...., நீ நல்லா படிப்பேன்னு எனக்குத் தெரியும் ப்ளீஸ்(???!!!!!)....” ன்னு என்னை பாத்து கெஞ்சுன இந்திரஜித்த பாத்தா எனக்குப் பாவமா தெரிஞ்சுது. என் கெட்அப்ப வச்சு என்னைய நம்பிட்டு இருக்கானே நாதாறின்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் வந்தாலும், பில்டப் எங்கயாச்சும் பரீட்சை எழுதுமா? கெட்அப் வந்து மார்க் வாங்குமா? தென்னாடுடைய சிவனே இது என்ன சோதனை, என்னை எப்டியாச்சும் ப்ளஸ் டூ பாஸ் பண்ண வைக்க வேண்டியது உன் பொறுப்புன்னு வேண்டிக்கிட்டே தமிழ் பரீட்சைய எழுதினேன். மொதல்ல உயிரோட இருக்கணும் அப்புறம்தான் மத்த விசயம் எல்லாம். அது மாதிரி பி.இ ஆவது புடலங்காயாவது... எப்டியாச்சும் பாஸ் பண்ணினா சரிதான்னு நினைச்சு தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பரையும் செகண்ட் பேப்பரையும் எழுதி முடிச்சேன். தமிழ்லதான் நாம விளையாடுவோமே.... அதைப் பாத்து இந்திரஜித் என் அழெகுல மயங்கி ரொம்பவே சந்தோசப்பட்டுட்டான். ” சில்லி சில்லி தமிழ் கேள்விக்கே திணறி நிக்குறியே இந்திரஜித்து, கணக்குப் பரீட்சை அன்னிக்கு நாம என்னடா பண்ண போறோம் நான் பெத்த மக்கான்னு....”  உள்ளுக்குள்ள அழுதுகிட்டே மூக்க உறிஞ்சிக்கிட்ட்டே தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா கொஞ்சம் ஸ்டடியாவே ரெண்டு பரீட்சையும் எழுதி முடிச்சேன்.

கணக்கு பரீட்சை பத்தி கவலைப்படாதீங்க நான் இருக்கேன்ன்னு விஜயகுமார் சார் ட்யூசன்ல சொன்னதை கேட்ட உடனே ஆபத்பாண்டவா அனாதை ரட்சகா..... பரப் பிரம்மமேன்னு கால்ல விழுந்து சரணாகதி ஆகாத கொறையா அவர் கொடுத்த நாலு மாடர்ன் கொஸ்டின் பேப்பரையும் பொட்ட தட்டுத் தட்டி நடு ராத்திரியில பேப்பரைக் கொடுத்தா கூட கடகடன்னு எழுதிக் குடுத்துடுற அளவு செம்மையா டெவலப் ஆகி இருந்தேன். விஜயகுமார் சார்....இந்த நாலு மாடல் கொஸ்டீன் பேப்பரையும் படிச்சவன்...200 க்க்கு 190 இல்ல....அப்டீன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டு...எங்களை எல்லாம் பாத்து ஒரு அசால்ட்டா ஒரு லுக் விட்டுட்டு.....

ஏன் சென்ட்டமே எடுக்கலாம்னு மீசைய முறுக்கிட்டு சொன்னப்ப... அடா..அடா... இவரல்லவோ வாத்தியார், இப்படி ஒரு ஆசான் கிடைக்க என்ன தவம் செய்தேன்... யான்னு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு எனக்கு. விட்றா...விட்றா.... நாம எல்லாம் இன்ஜினியர் ஆகாம வேற எவன் ஆவான்ன்னு சொல்லி பி.இ ல என்ன க்ரூப்ல ஜாயின் பண்ணலாம்னு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

மூன்றாம் பிறை படத்துல கமல் நரிக் கதை சொல்வாருல்ல ஸ்ரீதேவிக்கிட்ட 

” ஹஹஹ நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்”

அதே டோனோட திமிரா சட்டைக் காலர தூக்கிவிட்டு நடந்துகிட்டு இருந்தேன். ஏன்னா விஜயகுமார் சார் கொடுத்த நாலு கொஸ்டின் பேப்பர் மாடலும் எனக்கு அத்துப்படி. அவரே சொல்லிட்டார் இதை விட்டு வேற கேள்வி கேக்க எவனாலயும் முடியவே முடியாதுன்னு. சோ.. செம்மயா ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னாடி அப்பவே தெரிய ஆரம்பிச்சுடுச்சு. நான் வேற எதையுமே படிக்காம காலையில, நைட்ன்னு நாலு கொஸ்டின் பேப்பர் மாடலயே ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணி படிச்சுட்டு இருந்தேன்.

ஒரு நாள் மேகம் இடித்தது, மின்னல் வெடித்தது, காற்று அடித்தது, காடு துடித்தது,  நிலம் அசைந்தது, மழை பொழிந்தது...கணக்குப் பரீட்சையும் வந்தது. இஸ்ட தெய்வம் அத்தனையும் வேண்டிகிட்டு நெத்தி நிறைய திருநீறு குங்குமத்தோட பரீட்சை எழுதப் போற பேனா, பென்சில், ரப்பர், ஜாமிண்ட்ரி பாக்ஸ் இப்டி எல்லாத்துக்கும் விபூதி, குங்குமம், சந்தனம் வச்சு முட்டி, முட்டி மோதி, மோதி சாமி கும்பிட்டு யார்கிட்டயும் பேசாம ஜெகஜோதியா பரீட்சை ஹாலுக்குள்ள நுழைஞ்சேன். பக்கத்துல இந்திரஜித் தெம்பா உக்காந்து இருக்கறத பாத்து எனக்கு ஆச்சர்யம். என்ன ஆளு தில்லா இருக்க? கணக்குடா இன்னிக்குன்னு அவனைப் பாத்து சோகமா கேட்டேன். இந்திரஜித் என்ன பாத்து கண்ணடிச்சு ஆளு இன்னிக்கு உனக்கு டவுட் வந்தா நான் காட்டுறேன்டா நீ கவலைப்படாதன்னு கண்ணடிச்சான்.

என்னாடா சேதின்னு கேட்டதுக்கு, சட்டை காலரை காட்றான் அதுக்குள்ள பிட். பெல்ட்க்குள்ள பிட், சாக்ஸ்குள்ள பிட், பெல்ட் பக்கல்ஸ்க்குள்ள பிட் இப்டி உடம்பு ஃபுல்லா பிட் வச்சுக்கிட்டு ஒரு சூசையிட் பாம்ப் மாதிரியே வந்திருந்தான். எனக்கா சந்தோசம் தாங்கல விஜயகுமார் சார் கொடுத்த நாலு மாடல் கொஸீன் பேப்பர் + இந்திரஜித்தோட பிட்டுகள் மூலமா கிடைக்கப் போற ஸ்கோர்ன்னு.... ஒரு அரசியல்வாதி மாதிரி கூட்டணிக் கணக்குப் போட ஆரம்பிச்சேன்....

ஜாங்கு சக்கு ஜஜாக்கு சக்கு  ஜாங்கு சக்க சா.... உள்ளுக்குள்ள ராக்கம்மா கையத்தட்டுப் பாட்டு அதாவே பாட ஆரம்பிச்சுடுச்சு.


கொஸ்டின் பேப்பர வாங்கிப் பாக்குறேன்... கண் எல்லாம் இருட்டிக்கிட்டு தலை சுத்துது எனக்கு. வயிறு ஒரு மாதிரி இழுக்குது . இது 1992ஆம் வருசம் +2 பப்ளிக் எக்ஸாமுக்கு அடிச்ச கொஸ்டின் பேப்பரான்னு எனக்கு ஒரு டவுட் ஏன்னா... அதுல விஜயகுமார் சார் கொடுத்த மாடல் கொஸ்டின்ஸ்ல இருந்து ஒரு புண்ணாக்குமே வரலை... பாவி மனுசா நம்பி கழுத்தறுத்திட்டியேய்யா..... எனக்கு ஜுரம் வர மாதிரி ஆகிடுச்சு....

அடங்கொக்கமக்கா....பி.எ.  இல்லை பி.எஸ்ஸி கூட ஜாயின் பண்ண முடியாது போலயே... மறுபடி கணக்குக்கு மட்டும் அட்டம்ட் எழுதணுமோ? அப்பா வீட்டுக்குள்ளயே நுழைய விடமாட்டாரே...? நினைக்கவே வயித்துல புளிய கரைக்க... டக்குன்னு இந்திரஜித்த பாத்தேன். இந்திரஜித் இருக்கான் அவனை வச்சு ஏதாச்சும் ஒப்பேத்துவோம்  பிட் எல்லாம் நிறைய வச்சு இருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே டக்குன்னு எங்க ஸ்கூல் ஹெச்.எம் தேவாசீர்வாதம் சார் எங்க ஹாலுக்குள்ள வந்துட்டாரு. பயலுவளா ஒழுங்கு மரியாதையா பரீட்சை எழுதணும்னு ஃபார்மலா சொல்லிட்டு ஹால விட்டு வெளில போனவரு மறுபடி திரும்பி வந்து.....

ஏண்டா இந்திரஜித்து நீ இந்த ஹால்லயா எழுதுற...? நீ பிட் இல்லாம வரமாட்டியடா எங்க இங்குட்டு வா.... அப்டீன்னு கூப்ட்டு... இந்திரஜித்த குனிய வைச்சு, நிமிர வச்சு,  தலைகீழா நிக்க வச்சு, பெல்ட்ட அவுக்க வச்சு செக் பண்ணினா......ச்ச்சும்மா மழை மாதிரி கொட்டுது பிட்டு.  ஒரு பிட்டு விடாம அம்புட்டையும் எடுத்துட்டு இந்திரஜித்த குனிய வச்சு மடேர்....மடேர்....மடேர்ன்னு முதுகுல நாலு சாத்து சாத்திட்டு...” பள்ளிக்கூடம் பேரக் கெடுக்க வந்தியா நாயி மரியாதையா பரீட்சை எழுதுன்னு” சொல்லிட்டுப் போய்ட்டாரு.

இரண்டு செகண்ட்ல எல்லாம் நடந்துருச்சு. என் பக்கத்துல பல்லு புடுங்கின பாம்பா இந்திரஜித். அடப்பாவி மகனே ராஜா மாதிரி வந்தியேடா காலையில இப்டி பஞ்சர் ஆன ட்யூப் மாதிரி கிடக்கியேடான்னு என் விதிய நொந்துகிட்டு இனி நானாச்சு இந்த கொஸ்டின் பேப்பராச்சு பரீட்சையாச்சுன்னு முடிவு பண்ணி ஏதோ எழுத ஆரம்பிச்சப்ப.....

”இந்த நாலு கொஸ்ஸீன் பேப்பர் மாடலையும் சரியா ப்ராக்டீஸ் பண்றவன்... 200க்கு 190 இல்லை..... ஏன் சென்டமே எடுக்கலாம்..”னு விஜயகுமார் சார் சொன்னது காதுல அசரீரியா கேட்டுச்சு.....! பயபுள்ள ட்ட்யூசன் பீஸ்ஸுக்காக ஓவர் பில்டப் கொடுத்து நம்மள கவுத்திப்புடுச்சேன்னு.... சோகமா ஏதோ கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கேள்விகளா பாத்து மெல்ல மெல்ல பாஸ்மார்க் நோக்கி நான் முன்னேறிக்கிட்டு இருந்தேன். அப்போதைக்கு ஒரே இலட்சியம் 70 மார்க் எப்டியாச்சும் எடுத்துடனும் அவ்ளோதான்.

ஆளு... ஆளு எனக்கும் காட்டு ஆளுன்னு எனக்குத் தெரியாத கேள்விக்கு எல்லாம் இந்திரஜித் என்னை நோண்டிகிட்டே இருக்கத பாத்த ஹால் சூப்பர்வைசர் இந்திரஜித்த கூப்டு பின்னால ஒரமா ஒரு டெஸ்க்ல ஒக்கார வச்சுட்டார். இனிமே எல்லா பரீட்சையும் நீ இங்க இருந்துதான் எழுதணும்னு ஹெச். எம்கிட்ட சொல்றேன்ன்னு சொல்லி சொன்னதை செஞ்சும் புட்டாரு. இந்திரஜித்துக்கு அது வரமா சாபமான்னு எனக்கு அப்போ புரியல.அதுக்கப்புறம் ரிசல்ட் வந்தப்புறம் க்ளாஸ்ல எவன் என்ன ஆனான்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண காலம் விடலை. 

110 மார்க் வாங்கி எப்டியோ ஒரு லக்குல நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணி திருப்பத்தூர் அப்ஸால பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியும் ஜாயின் பண்ணிட்டேன். பர்ஸ் இயர் பர்ஸ்ட் செமஸ்டர் லீவுக்கு திருப்பத்தூர்ல இருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ்ல வந்துட்டு இருந்தேன். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட்ல டீ குடிக்க வண்டி நிறுத்தி இருந்தாங்க. டீயை வாங்கி ஒரு வாய் உறிஞ்சுனப்ப யாரோ முதுகுல பளீச்ச்ச்னு அடிச்சு என்னை திருப்ப...

ஆளு எப்டி இருக்க..? வாயெல்லாம் பல்லா....இந்திரஜித் நின்னுகிட்டு இருந்தான் அங்க. என்ன மச்சி நீ எப்டி இருக்கன்னு திரும்ப கேட்டுட்டு? நான் திருப்பத்தூர்ல ஜாயின் பண்ணி இருக்கேன்டா? நீ எந்த பஸ்ல வந்த? ஊருக்கு வர்றியா இல்லை எங்க போற...?ன்னு அவன்கிட்ட மட மடன்னு கேட்டேன். நான் கீழக்கரை போறேன் ஆளு அங்கதான் படிக்கிறேன்னு அவன் சொன்ன உடனேயே எனக்கு கணக்குப் பரீட்சை நினைப்புக்கு வந்துடுச்சு. சமாளிச்சுக்கிட்டு நீ என்ன படிக்கிறடான்னு கேட்டதுக்கு....கீழக்கரைலதான் ஆளு பி.இ அப்டீன்னு அவன் சொல்லவும் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு....

ஓய்...எப்டிடா....? நீ தேவாசீர்வாதம் சார்கிட்ட அடி வாங்கிட்டு உன்னை ஓரமா தூக்கி உக்கார வச்சாங்க..? நீ மொதல்ல பாஸ் பண்ணினியான்னே தெரியலையேடான்னு கேட்டேன். 

அட நீ வேற ஆளு பின்னாடி பக்கம் ஓரமா உக்கார வச்சாருல்ல..., அடிச்சுச்சு எனக்கு பம்பர் குலுக்கல். நான் நடராஜன்கிட்ட அவருக்குத் தெரியாம பேப்பர வாங்கி, வாங்கி எழுதினேன்டா....160 கணக்குல....அப்டி இப்டி அடிச்சு புடிச்சு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சதக் இன்ஜினியரிங் காலேஜ்ல சேந்துட்டேன்...ஹி...ஹி....ஹின்னு சிரிச்சுட்டே சொன்னான்...நல்ல வேளை நான் உன் பக்கத்துல ஒக்காரல மச்சி....அவ்ளோதான் நானும் அப்புறம் பி.எ.வோ பிஎஸ்ஸியோ படிச்சு குப்பைக் கொட்டி இருக்கணும்....

இந்திரஜித் சத்தமாய் சிரிச்சுட்டு இருந்தான்.

எனக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியலை. அப்போ அவனுக்கு பாய் சொன்னதோட ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சுட்டோம். 

இப்போ இந்திரஜித் யு.எஸ்ல ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாத்துட்டு இருக்கானாம்....சாரி...சாரி.. இருக்காராம்.



தேவா சுப்பையா....


Comments

நரிக் கதை - சொன்ன பாணி ரொம்பவே ரசித்தேன்...
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது...

இதுபோல இந்திரஜித்துக்களை நானும் நிறையப் பார்த்திருக்கிறேன்...

ஒண்ணுமே தெரியாத நண்பன் ஜாவா புரோக்கிராமரா இருக்கான்... அவனுக்குச் சொல்லிக் கொடுத்த நான் சாப்ட்வேர் பக்கமே போகமே வேற எங்கிட்டு எங்கிட்டோ போயி இங்க வந்து நிக்கிறேன்.

பரிச்சையில் பின்னாலிருந்த நண்பனுக்கு பேப்பர் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் ஆட்டோக்கிராப்பில் அவன் நீதி நேர்மை என்று போனால் தெருவில்தான் நிற்பாய் என்று எழுதிக் கொடுத்தான்.

அப்படித்தான் போகிறது வாழ்க்கை...

சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைத்த பகிர்வு அண்ணா...
Balaji.D.R said…
நண்பன் நம்மல விட கம்மிய மார்க் எடுத்தாலோ பெயில் ஆனாலோ வருத்தமா இருக்கும். நம்மல விட ஜாஸ்தியா நல்ல மார்க் எடுத்தா ரொம்ப வருத்தமா இருக்கும். இந்த கத எல்லார் வாழ்க்கையிலும் நடக்கும் போல. ஹி ஹி.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த