Skip to main content

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்...!


தமிழ் இணைய வெளிக்குள் உலாவும் அத்தனை பேருக்கும் கேபிள் சங்கரைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை அதுவும் வலைப்பதிவர்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட அவர் பீஷ்மர் மாதிரி. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தொடர்ச்சியாய் தனது உணர்வுகளை சமூகம் பற்றிய பார்வைகளை அவர் பதிவு செய்யாமல் இருந்ததே இல்லை. ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரணமான வேலை இல்லை என்றாலும் அதற்கு இடையிலும் அவர் வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டுதான் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...!

கே.ஆர்.பி செந்தில் மூலம்தான் கேபிள் அண்ணா எனக்கு அறிமுகமானார். கேபிளின் கடுமையான உழைப்பையும், திட்டமிடலையும், சினிமா பற்றிய அறிவையும் பற்றி அடிக்கடி அவர் சிலாகித்துப் பேசுவார். இணைய உலகில் கேபிளின்  சினிமா விமர்சனங்கள் வெகு பிரலபமானது. ஒரு திரைப்படம் சரியாய் இல்லை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கிழித்து தொங்க விட்டு விடுவார். சினிமா விமர்சனம் எழுதியவர், கதைகள் கவிதைகள், கட்டுரைகள், என்று எழுதியவர் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே.... அதெல்லாம் அவருக்கு சரியாய் வருமா என்ற நிறைய பேர்களின் நினைப்பை... புட்பாலாக்கி ஸ்ட்ரெய்ட்டாக கோல் அடித்து பரபரப்பை உண்டாக்கியது தொட்டால் தொடரும் படத்தின் முதல் டீசர் பாடல்.

சமகால இளையர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் எதை ரசிப்பார்கள் என்பதை இளைஞர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு சமூகப் பிரச்சினைகளை பார்க்கும் ஒருவரை விட வேறு யாரால் தெளிவாய்ச் சொல்லி விட முடியும்.....?

கேபிள் சங்கர் 100 படங்களுக்கு உதவி இயக்குனராய் பணியாற்றி சினிமா மரபுகளையும் இன்ன பிற தயவு தாட்சண்யங்களையும் பின்பற்றி தன்னை அதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு இயக்குனர் ஆனவர் அல்ல....


அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பார்த்து  ரசிகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தெளிவாய் அறிந்து வைத்திருப்பவர். என்னைப் போன்ற வலைப்பதிவர்களுக்கு எல்லாம் வலைப்பதிவர்களின் முன்னோடியான கேபிள் சங்கர் படம் இயக்கப் போகிறார்  என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து ரஜினி புதுப்படம் அறிவித்ததைப் போலத்தான் இருந்தது. தொட்டால் தொடரும் படத்தின் செய்திகள் இணையத்தில் வரும்போதெல்லாம் வெகு ஆவலாய் அதைப் பார்ப்பதும் படிப்பதுமாய் இருந்த எங்களுக்கு வெகு சீக்கிரமே படம் வெளியாகப் போகிறது என்ற செய்தி வெகு இனிப்பானதுதான்.

தொட்டால் தொடரும் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் அந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு முன்பு திரி பற்றிக் கொள்ளுமே சர...சரவென்று....அதே வேகத்தில் படத்தின் ஷாட்களும், பின்னணி இசையும், வசனங்களும் ஸ்க்ரீனில் பரபரக்க....பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குள்ளும் பற்றிக் கொள்கிறது அந்தப் பொறி....!

ஒரு வெற்றிப்படத்திற்குரிய சகல குணாதிசயங்களுடன் வெளியாகி இருக்கும் தொட்டால் தொடரும் பாடல்களும், ட்ரைலரும்  இணையத்தில் இப்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன...! 


தொட்டால் தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அண்ணன் கேபிள் சங்கர் எட்ட முடியாத உயரங்களை எல்லாம் எட்டிப் பிடிக்க  எனது அன்பான வாழ்த்துகள்...!


தேவா சுப்பையா...




Comments

அண்ணன் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படம் வெற்றிபெற்று தொடர்ந்து பல வெற்றி படங்கள் குவிக்க வாழ்த்துக்கள்!
Unknown said…
நன்றி தேவா :))
kowsy said…
தொடர் வெற்றிக்கு நிறைவான வாழ்த்துக்கள்
Anonymous said…
Songs are Very GOOD.

waiting for big show.

Seshan/Dubai
கேபிள் அண்ணா தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த